Friday 28 July 2017

சோலிடாகா

சோலிடாகா
(SOLID)
SOLIDAGA VIRGA-AUREA




சிறுநீரகங்கள் செயலிழந்து துன்பப்படும் துயரர்களை மீட்டெடுத்து அவர்களை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு வரும் மருந்து சோலிடாகா . இம்மருந்து  குறிப்பாக சிறுநீரகங்கள், ஜீரணவழிப்பாதை, கால்கள் மற்றும் இரத்தத்திலும் நன்றாக வேலை செய்கிறது. 


துயரர்கள்  மிகவும் பலவீனமாக இருப்பார்கள். குளிர்ச்சியும் , வெப்பமும் மாறிமாறி தாக்குவதாக உணருவார்கள். இவர்களுக்கு சுலபமாக சளி பிடிக்கும்.

நாட்பட்ட  சிறுநீரக வேக்காடு ( NEPHRITIS=BRIGHT’S DISEASE) .

இம்மருந்து சிறுநீரகங்களில் நேரிடையாக செயல்பட்டு இறுக்கத்தையும்  மற்றும் வீக்கத்தையும் ஏற்படுத்துவதால், சிறுநீர் கழிப்பதில் சிரமப்படுபவர்களையும் , சிறுநீரகத்தில் ஏற்படும் வலிகளையும் நலப்படுத்துகிறது.   (மரு. கவ்தர் வெய்த்).

சிறுநீரகங்கள்  இரத்தத்தில் இருக்கும் விஷப்பொருள்களை வடிகட்டி வெளியேற்றாததால் , அவ்விஷங்கள் உடலில் தங்கி அதனால் ஆஸ்த்மா ( UREMIC AATHMA) ஏற்படும் என்று மரு. எஸ்.ஆர்.பதக் குறிப்பிடுகிறார். 

ஆஸ்த்மாவும் , சிறுநீர்கழிப்பதில் சிரமமும் (இரவில்) சேர்ந்தே இருக்கும். ( மரு. எஸ்.எம். சர்க்கார்).

மஞ்சள்  சுரத்திற்கும் மற்றும் பூனைகளினால் ஏற்படும் ஒவ்வாமைக்கும் இது மிகச் சிறந்த மருந்து என்கிறார் மரு. வெர்முலன் பிரான்ஸ் . 

சுக்கிலசுரப்பியில் அழற்சி ஏற்படுவதாலும் அல்லது பெருத்துவிடுவதாலும் கண்கள் சிவந்து காணப்படும்.

வாயில் கசப்புச்சுவை இருந்து கொண்டேயிருக்கும். நாக்கில் அடர்த்தியான மாசு படிந்திருக்கும்; சிறுநீர் நன்றாக கழிந்துவிட்டால் இது சரியாகிவிடும்.

சிறுநீர் கருமையாகவும் மற்றும் சிறிதளவே  வெளியேறும் . அல்லது தெளிந்த, முடைநாற்றமுடைய (STINKING) , படிகாரத்தின் இயல்புடன் , பசை போன்று வெளியாகும் (BENZ-AC,NIT-AC).

சிறுநீரகங்கள் கூருணர்ச்சியுடன் , சிறு அழுத்தத்தையும் தாங்காத நிலையில் புண்ணாகி , வலியுடன் வீங்கிக் காணப்படும். அதனால் சிறுநீரகத்தில் இருக்கும் வலி அடிவயிறு , சிறுநீர்ப்பை மற்றும் தொடைப்பகுதி வரை நீடித்திருக்கும்  ( BERB).

பெண்களுக்கு கர்ப்பப்பை பெருத்து விடும்; அதனால் சிறுநீர்ப்பையை கிழே அழுத்தித் தள்ளும். நார்த்திசுக்கட்டிகள். பெண்களுக்கு இடுப்புவலி வந்தால் அது உடல்முழுவதையும் பாதித்து விடும்.

கால்களில் சிவப்பான இரத்தப்புள்ளிகள் . நீர்கோவையுடனும் மற்றும் அரிப்புடனும் காணப்படும். (PETECHIAE).

தோலில் கரப்பான் புண் இருக்கும்; சிறுநீர் உள்ளமுக்கப்பட்டதால் தொல்லைகள் அதிகரிக்கும்.

இவர்களது தொல்லைகள் யாவும் அமுக்குவதால் அல்லது அழுத்துவதால் அதிகரிக்கும் . சிறுநீர் தாராளமாக வெளியேறிவிட்டால் தொல்லைகள் குறைந்து விடும்.

ஆர்சனிக்கம் ஆல்பம்  இதனுடைய உறவு மருந்து ஆகும். 



No comments:

Post a Comment