Monday 17 July 2017

ஆம்பிரா க்ரிஸா

ஆம்பிரா க்ரிஸா
(ambr)
AMBRA GRISEA





ஒட்டி  உலர்ந்த உடலும், பரபரப்பும் உள்ளவர்களுக்கும், மெலிந்து தோலும் எலும்புமாய் உள்ள பெண்களுக்கும் தளர்ச்சியடைந்த உறக்கமற்ற , நடுக்கமுள்ள ( NERVOUS) வயதானவர்களுக்கும் , குழந்தைகளுக்கும் உபயோகப்படக் கூடியது.

மனமும் , உணர்வும் சீர்குலைந்த நிலையிலிருக்கும் துயரர்களுக்கும் இது முக்கியமாகப் பயன்படுகிறது. துயரர்  முதலில் யாருடனும் பேச விரும்பாதவராகவும் , கூச்சத்தன்மையுடனும் இருப்பார்; இந்நிலை முற்றிய பிறகு அறிவுகுறைபாடுடன் சற்று அதிகம் பேசுபவராகவும் இருப்பார்.

பேசும் பொழுது ஒரு பொருளிலிருந்து மறறொரு பொருளுக்குத் தாவிக் கொண்டே இருப்பார்கள்; இவரது முதல் கேள்விக்கு நாம் பதில் சொல்வதற்குள் பேசிக் கொண்டே போவார்கள்.

மனநிலை பாதிக்கப்பட்டு மந்தநிலை ஏற்படுவதால் விஷயங்களை சீக்கிரத்தில் புரிந்து கொள்ள முடியாமை; ஒரு வாக்கியத்தை பலமுறை திரும்பத் திரும்பப் படிக்க வேண்டியிருத்தல்; அப்படிப் படித்தாலும் புரியாது; சிந்தனை செய்யும் சக்தி குறைவாக இருக்கும்.

தனக்கு வறுமைநிலை ஏற்பட்டுவிடும் என்று பயந்து இவர், யாருக்கும் எதுவும் கொடுக்கமாட்டார் (மரு.தீதியர்).

வியாபாரம் தோல்வியடைந்த பிறகும் (கவலை); குடும்பத்தில் அடுத்தடுத்து ஒவ்வொருவராக பலர் இறந்தாலும் ஏற்படும் அதிர்ச்சி (மரு.பதக்) .

மனத்துன்பத்துடன் பல நாட்களாக அலுத்து கொண்டிருப்பார்கள் ; சிரிப்பதற்கு விருப்பம் இருக்காது.

இவர்களுக்கு நேரம் மெதுவாக செல்லுவதாகத் தோன்றும்.

வயதானவர்களுக்கு தொன்று தலைச் சுற்றல்.

இசிவு. மனஅழுத்தம். பதட்டம். (மரு.ரோஜர் மாரிசன் )

நாக்கின் அடியில் நீர்க்கட்டியோ அல்லது தசை வளர்ச்சியோ இருக்கும்.

மிகவும் வெட்கப்படும் சுபாவம். இவர்கள்  யாருடனும் சேர்ந்திருக்க விரும்பமாட்டார்கள் ( குறிப்பாக அந்நியர்கள்).  வீட்டிலோ அல்லது பொது இடங்களிலோ யாராவது உடனிருந்தால்  அதாவது , செவிலியரோ அல்லது அறையில் வேறு யாரோ கூட இருந்தால் இவர்களால் சிறுநீரோ அல்லது மலங்கழிக்கவோ முடியாது.

அதேபோல் குழந்தைகளும் மற்றவர்கள் முன்பு மலம் மற்றும் சிறுநீர் கழிக்க விரும்பாது; குழந்தையை மலங்களிக்க கழிவறைக் கோப்பையில் உட்க்காரவைத்தால்  எழுந்து சென்று வீட்டின் மூலையில் ஒளிந்து கொள்ளும்.


மலச்சிக்கல் ; அடிக்கடி மலங்களிக்க தோன்றும்.(NUX-V)

சப்தம் மற்றும் இசைக்கு மிகவும் கூருணர்ச்சி உள்ளவர்களாக இருப்பார்கள் (அழுகை வரும்). இசையினால் தொல்லைகளும் அதிகரிக்கும்.

இசையைக் கேட்டவுடன் இருமல் தூண்டப்படும் ; அடிக்கடி பேசினாலும் அல்லது சத்தமாக படித்தாலும் இருமல் கூடும். அடிக்கடி ஏப்பத்துடன்  வலிப்பு போன்ற கடுமையான இருமல் இருக்கும் ; பல மனிதர்கள் உள்ள இடத்திலும் , புதிய மனிதர்கள் இருக்கும் இடத்திலும் இருமல் அதிகமாகும்.

குழந்தைகளுக்கும் , வயதானவர்களுக்கும் ஏற்படும் காச நோய்.  மார்பில் அமுக்கும் உணர்ச்சியும் , காற்றுக் குழாயில் கரகரத்த சப்தமும் , இதயத்தின் ஆழத்திலிருந்து வலி வருவது போன்று இருக்கும். குறிப்பாக வயதானவர்களுக்கு உடலுறவிற்கு முயற்சி செய்யும் போது தோண்டும் காச நோய்.


கவலையினால் தூக்கம் வருவதில்லை, எழுந்து உட்கார நேருதல்.


பெண்களுக்கு மாதவிடாய்களின் இடைக்காலங்களிலும் , கஷ்டப்பட்டு மலங்களித்த பிறகும் அல்லது கடினமாக நடந்த பிறகும் இரத்தஒழுக்கு இருக்கும்.(மரு.இ.பி.நாஷ் ).


வெப்ப உடல்வாகு உள்ளவர்கள்.குளிச்சியான உணவையும் , குளிர்ந்த பானங்களையும் விரும்புவார்கள்.


இதனுடைய உறவு மருந்தாக பாரிடா கார்பானிக்கம் மற்றும் இக்னேசியாவும் இருக்கிறது.

No comments:

Post a Comment