Saturday 17 September 2022

மாமேதை ஹானிமனின் மூன்று நோய் மூலக்கூறுகள்

 

மாமேதை ஹானிமனின் மூன்று நோய் மூலக்கூறுகள்

( HAHNEMANN’S THREE MIASMS)

 

 

மாமேதை ஹானிமனின் , ஹோமியோபதின் கோட்பாடுகளை விரிவாக்கத் தொடங்கியபோது, நாட்பட்ட நோய்களுக்கு பொறுப்பு வகிக்கிற அல்லது காரணமாக இருக்கின்ற,  சொறி-சிரங்கு, மேகவெட்டை மற்றும் மேகவெட்டை என்ற  மூன்று நோய்மூலக்கூறுகளை ( PSORA, SYCOSIS. SYPHILIS )  கண்டறிந்தார். இன்றைக்கு,  அந்த மூன்று நோய் மூலக்கூறுகளையும் உற்று நோக்கும் போது,  அவைகள் அன்பின் மூன்று பரிமாணங்களுக்கு மிக நெருக்கமாக இருப்பதை நாம் பார்க்க முடியும், அத்துடன் உளவியலறிஞர் சிக்மண்ட் பிராய்டு குறிப்பிடட பாலுணர்வு உளவளர்ச்சி ( PSYCHOSEXUAL DEVELOPMENT) பற்றிய மூன்று நிலைகளைக் குறிப்பதாகவும்  இருக்கிறது.

 

ஹானிமன் முதல் நோயமுலக்கூறான , சொறி-சிரங்கு நோய்மூலத்திற்கு  (PSORA) , சிரங்கு நோய் அல்லது "அரிப்பு" நோயே காரணமாக இருக்கிறது என்கிறார்.  இது குறைபாடு அல்லது பற்றாக்குறை( LACK), வறுமை அல்லது ஆதரவின்மை  ( DESTITUTION) , குளிர் ( COLD) மற்றும் பசி ( HUNGER) போன்றவற்றைக் குறித்துக் காட்டுகிறது.  , அதேபோல்  "நான் ( I ) " என்ற உணர்வு  மற்றும் பிராய்டின் வாய்வழி நிலையின் (ORAL STAGE)  துன்பங்களையும் குறிக்கிறது.

 

இரண்டாவது நோய்மூலக்கூறான , மேகவெட்டை நோய்மூலக்கூறு (SYCOSIS)  , மேகவெட்டை நோயினால்  தூண்டப்பட்டது மற்றும் அதிகப்படியான ( EXCESS-இயல்பு கடந்த அளவு) , ஆற்றல் (POWER) மற்றும் கட்டுப்பாடு இல்லாமை ( LACK OF CONTROL) மற்றும்  "நாம் ( WE ) " என்ற உணர்வையும் மற்றும் பிராய்டின் குத நிலை ( ANAL STAGE) ஆகியவற்றைக் குறிக்கிறது.

 

 

மூன்றாவது நோய்மூலக்கூறான , மேகப்புண் நோய்மூலம் (SYPHILIS) , அழிவு (DESTRUCTION) , பொறாமை (JEALOUSY) , கொலை (MURDER) மற்றும் பிராய்டின் தந்தையை வெறுத்து தாய் பாசமிகைப்பு சிக்கல்நிலை ( OEDIPUS COMPLEX) ஆகியவற்றைக் குறிக்கிறது , மேலும் "ஓர்மை (ONE)  " - அதாவது அன்பின் மூன்றாவது பரிமாணத்திற்கு முன்னேறுவதையும் குறிக்கிறது.

 

ஒரு மனிதனின்  உளவியல் வளர்ச்சியானது, அவன்  கருத்தரித்த தருணத்திலிருந்து, தந்தையின் பாலின உயிரணுக்கள்  தாயின் பாலின உயிரணுக்களுடன் இணைந்தவுடன் துவங்கி , வாழ்க்கையின் இறுதி வரை இந்த மூன்று வலிமையான நோய் ஆற்றல்களால்  பாதிக்கப்படுகிறது.

 

இந்த மூன்று முக்கிய நோய்மூலக்கூறுகளின் போக்குகள், ஹானிமன் அவர்களால் நாள்பட்ட நோய்கள் என அழைக்கப்படுகின்றன, அவை பரம்பரையாக பரவுகின்றன மற்றும் நோயாளியின்  மற்றும் குடும்ப வரலாற்றிலிருந்து அவற்றை அடையாளம் காண முடியும்.

 

ஒவ்வாமை ( ALLERGIES) , சிரங்கு அல்லது அரிக்கும் தோலழற்சி ( ECZEMA) மற்றும் ஊட்டச்சத்து பிரச்சினைகள் ஆகியவற்றுடன்   கைவிடப்பட்ட உணர்வும் இணைந்து  சோரினம் மருந்தும்  ( PSORINUM)   அல்லது தனது உடலை விட்டு வெளியேறி இந்த கொடூரமான உலகத்திலிருந்து தப்பிக்க விரும்புவதால் டியூபர்குலினம் மருந்தும் (TUBERCULINUM)  , சொறி-சிரங்கு நோய்மூலத்தை நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறது . ( சல்பர் –SULPHUR , இன்னொரு முக்கியமான மருந்தாக இருக்கிறது- மொ-ர் ).

 

மேகவெட்டை விஷநோய்க்கூறு  என்பது கட்டிகளை உருவாக்கும் தன்மையைக் குறிக்கிறது, கார்சினோசின் (CARCINOSIN)  அதற்கான முக்கிய மருந்தாக இருக்கிறது.  அவர்கள் தங்கள் ரகசியத்தை மிகவும் நெருக்கமாகப் பாதுகாத்து, அதை யாருக்கும் வெளிப்படுத்த மாட்டார்கள்- அதாவது "நீங்கள் பேசாத சில விஷயங்கள் உள்ளன".இவர்கள் மற்றவர்களை புண்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக தங்கள் உணர்வுகளை ஒருபோதும் வெளிப்படுத்தாதவர்கள் மற்றும் , இறுதியாக புற்றுநோயை உருவாக்கிக் கொள்கிறார்கள் , இது இரத்தநாளங்களில் உள்ள உயிரணுக்களின் வேறுபாட்டை இழக்கிறது.

 

மற்ற மேகவெட்டை நோய்க்கூறு  நிலைமைகளில் உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன் மற்றும் நீரிழிவு ஆகிய நோய்கள் ஏற்படுகின்றன , இத்தகைய நோயாளிகள் ,   நிகழ்காலத்தில் வாழாமல் எதிர்காலத்தை பற்றிய  நிலையான கவலையுடன்  வாழ்ந்து வருவதால் " மெடோரினம்" ( MEDORRHINUM)  முக்கிய மருந்தாக இருக்கிறது - இது உண்மையானது மற்றும் நித்தியமானது. ( இந்த மேகவெட்டை நோய்மூலத்திற்கு,  மருக்கள், பாலுண்ணி போன்றவற்றில் தூஜா-THUJA,  இன்னொரு முக்கியமான மருந்தாக இருக்கிறது- மொ-ர் ) .

 

இறுதியாக, மரபணு குறைபாடுகள், இரத்த ஓட்டம் சம்பந்தமான  நோய்கள், குடிப்பழக்கம் மற்றும் தற்கொலைக்கு ஆளாகக்கூடிய குடும்பங்களில் மேகப்புண் விஷநோய்மூலக்கூறு முக்கிய காரணமாக இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. உதாரணமாக, சிபிலினம் (SYPHILINUM) மருந்து  , ஒரு குற்றத்தைச் செய்தபின் தன்னைத் தூய்மைப்படுத்துவது போல், கை கழுவுவதற்கான திடீர் வெறியை உருவாக்குகிறது. ( இந்த மேகப்புண் நோய்மூலத்திற்கு மெர்க்கூரியஸ் –MERCURIUS, இன்னொரு முக்கியமான மருந்தாக இருக்கிறது- மொ-ர்) .

 

எல்லையற்ற அன்பை ( INFINITE LOVE) நோக்கிய நமது மருத்துவப்  பயணத்தில்,  நாம் இன்னும் தீர்க்க வேண்டிய சிக்கல்கள் மற்றும் பிரச்சனைகளை  எதிர்கொள்ள இந்த மூன்று நோய்மூலக்கூறுகள் பற்றிய அறிவு உதவும் என்று நமக்குத் தெரியும்.

 

 

மூலம் : Homeopathic Remedies for the Stages of Life,

மரு.  தீதியர் கிராண்ட் ஜார்ஜ் MD

தமிழில்:  சு. கருப்பையா .

மனம் பற்றி புத்தர்.

 

புத்தரின் போதனைகளின் தனிச் சிறப்பான முக்கிய அம்சம் அனைத்துக்கும் நடுநாயகமாய் மனத்தை அங்கீகரித்ததில் உள்ளது.

 

மனம் பொருள்களுக்கு முந்தியது, அவற்றை ஆள்கிறது , படைக்கிறது, மனம் அறியப்பட்டால் அனைத்தும் அறியப்படுகின்றன.

 

மனம் அதன் செயல்திறன் அனைத்துக்கும் தலைமையானது, அந்த செயல்திறன்களாலானதே அந்த மனமாயுள்ளது.

 

முதலில் கவனிக்கப்பட வேண்டியது மனத்தைப் பண்படுத்துதலே .

 

அகத்து எழுகின்ற மற்றும் புறத்திருந்து நம்மேல் விழுகின்ற எல்லா நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் மனமே ஊற்றுக்கண்.

 

தீமையாய் உள்ளவையாவும், தீமையோடிணைக்கப்பட்டுள்ள யாவும், தீமைக்குரிய யாவும்- மனத்தினின்று தோன்றுபவையே. நன்மையாய் உள்ளன யாவும் , நன்மையோடிணைக்கப்பட்டுள்ள யாவும் , நன்மைக்குரிய யாவும் - மனத்தினின்று தோன்றுபவையே.

 

மனத்தின் இச்சைக்குட்பட்டு ஒருவன் பேசினாலோ , செயற்பட்டாலோ , வண்டியிழுக்கும் காளைகளின் பாதங்களைத் தொடரும் வண்டியைப் போல பேரிடர் அவனைத் தொடர்கிறது. எனவே மனத்தின் மாசறுத்தலே சமயத்தின் சாரம்.

 

உண்மையான சமயம் மத நூல்களில் இல்லை- மாறாகச் சமயக் கோட்பாடுகளை அனுசரித்தலிலேயே உள்ளது.

 

 

நூல்: புத்தரும் அவர் தம்மமும்.

டாகடர் பி.ஆர்.அம்பேத்கர்.

Wednesday 7 September 2022

பரம்பரையாக வரக்கூடிய பண்பு ( HEREDITY)

 

பரம்பரையாக வரக்கூடிய பண்பு ( HEREDITY)

 

மரபுப் பண்புகளைத் தீர்மானிக்கும் உயிர்மக்கூறு (CHROMOSOMES)  நமது உடலின் பரம்பரைப் பண்புகளை சுமந்து வருகின்றன  - அந்தப் பரம்பரைப் பண்புகள் சில சமயங்களில் சுமையாகவும் இருந்து விடுகின்றன , அதாவது , இரத்தம் உறையாத  நோய் (HEMOPHILIA) , நீர்மத் திசுவழற்சி (CYSTIC FIBROSIS) , தசைநார் தேய்வு (MUSCULAR DYSTROPHY ) மற்றும் மனநலிவுநோய்  ( DOWN'S SYNDROME ) போன்ற நோய்கள் உருவாகுவதற்கு இதுவே  காரணமாக இருக்கிறது.

செர்கே  திஸ்ஸரோன் ( SERGE TISSERON)  மற்றும் அன்னி  அன்சலின்  சுசியற்சன்பெர்கர் ( ANNE ANCELIN SCHIITZENBERGER) போன்ற ஆராய்ச்சியாளர்கள், பல தலைமுறைகளாக பேசப்பட்டு வரும்  ஒவ்வொரு மெய்யான இதிகாசங்களிலும், நாம் ஒவ்வொருவரும்  உளவியல் சார்ந்த  பரம்பரைப் பண்புகளை எப்படிக் கொண்டிருக்கிறோம் என்பதை மெய்ப்பித்துக் காட்டியுள்ளார்கள் .

எடுத்துக்காட்டாக, சில குடும்பங்களில், அனைவருக்கும் ஒரே வயதில் கடுமையான விபத்து ஏற்படுகிறது, இது எப்போதும் தற்செயலான வெளிப்புற நிகழ்வுகளால் ஏற்படுகிறது. ஹீப்ரு மொழியில் கூறுவதென்றால்  இது விபத்து அல்ல "வாய்ப்பு"  என்று பொருள்படுகிறது மற்றும்   "துயர் நீக்குதல்" அல்லது "உதவி"  என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

சல்பூரிக்கம் ஆசிட் ( SUL-AC) மருந்திற்குரிய மனிதர்கள் அடிக்கடி விபத்துகளை சந்திக்கும் கருப்பொருளை மரபுரிமை வழியாக பெற்றிருப்பார்கள். தங்களது நனவிலியின் மூலம் உந்தப்பட்டு அல்லது தூண்டப்பட்டு , அவர்கள் அஜாக்கிரதையான முறையில் செயல்படுகிறார்கள் மற்றும்  இந்த நிகழ்வு ஒரு  வகையான நாடகக்காட்சி போல்  தலைமுறை தலைமுறையாக  திரும்பவும்  தொடர்ந்து வருகிறது .

சில சமயங்களில், ஒரு தலைமுறையில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் , ஒரு குறிப்பிட்ட விபத்தினால் பாதிக்கப்பட்டிருந்தால், அந்த ஞாபகம் அடுத்து வரும் தலைமுறைகளுக்கு கடத்தப்படுகிறது. இறுதியில், அந்த நினைவாற்றல் நனவிலியில்   ஆழமாக செலுத்தப்படுகிறது, அதை மரபுரிமையாகப் பெறுபவர்கள் தங்கள் துன்பத்திற்கான காரணத்தை புரிந்து கொள்ள முடியாது.

பெரும் வேதனைகளை சுமந்து கொண்டுள்ள சில குடும்பங்ககளின் இரகசியங்கள் , இறப்போடு இணைக்கப்பட்டதாக இருக்கிறது. ஒரு முறை , எட்டு வயது பையன் ஒருவனை  என்னிடம் அழைத்து வந்தார்கள்  , அவனது தந்தை ஒரு நாள் இரவு திடீரென்று இதயச் செயலிழப்பினால் இறந்து போயிருக்கிறார். அவர் இறந்து போனதை  அவனிடம் தெரிவிக்காமலேயே  அவனை  கிராமத்தில் இருந்த அவனது பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.   ஆனால்,  அந்தப்பெண்மணி அவனது தந்தை இறந்துவிட்டதை தன்னுடனே வைத்துக்கொள்ள முடியாமல் அவனிடம் சொல்லி விடுகிறார். அடுத்தநாள் காலை, அவன் தூக்கத்திலிருந்து எழுந்த போது , உடல் முழுவதும் தடிப்புச் சொறி ( URTICARIA=ஒவ்வாமை)  பரவி இருந்துள்ளது. அந்த கிராமத்துப் பெண்மணி அவனுக்கு பூனைக் காஞ்ச்சொறிச் செடியின் ரசத்தை  அவனுக்கு கொடுத்திருக்கிறார். அந்தச் சாறு அவனை விரைவாக நலப்படுத்தி  இருக்கிறது.

இந்தக் கதையை கேட்டதும் ,   அவனுக்கு கொடுக்கட்ட பூனைக் காஞ்ச்சொறிச் செடியின் ரசம் -  யுர்டிகா யுரேனஸ் (URT-U) , அவனது தந்தையின் இறப்பினால் ஏற்பட்ட மனத்துன்பத்தை போக்கும் மருந்தாக கட்டாயமாக இருந்திருக்கிறது என்பதை அறிந்து கொண்டேன். அந்தச் செடி தனது கிளைகளில் சிறிய முடிகளைக் கொண்டிருக்கும்; அவைகள் நமது  தோலில் உராய்ந்தால் அரிப்பை ஏற்படுத்தும். அந்தச் செடியின் முள் போன்ற  இலையைப் போலவே  அவனது தந்தையின் தாடியும் இருந்துள்ளது  , இவன் இரவில் தூங்கும் சமயத்தில் அவர் முத்தமிடும் போது அந்த முடி குத்தியிருக்கிறது.

ஹோமியோபதியில் , யுர்டிகா யுரேனஸ் (URT-U) மருந்து தாய்ப்பால் சுரத்தலை அதிகரிக்கும் ஒரு சிறந்த மருந்து என்பதை நாம் அறிந்துள்ளோம். அது போலவே , அது தடிப்புச்சொறி , கடல்வாழ் உயிரின உணவுகளை சாப்பிட்டபின் ஏற்படும்  அரிப்பு, ஒவ்வாமை போன்ற  பாதிப்புகளையும் நலமாக்குவது நமக்கு தெரியும், ஆனால் , இந்த மருந்தை நிரூபணம் செய்த  போது ஒரு மனக்குறி கூட அடையாளம் காணப்படவில்லை என்பது வியப்பாக இருக்கிறது  (  தற்போது மருந்துகாண் ஏட்டில் , தான் நேசித்தவர்களின் இறப்பு, தந்தை மற்றும் நண்பர்களின் இறப்பிற்கு பின்  ஏற்படும் தொல்லைகள்   போன்ற சில மனக்குறிகளில் இந்த மருந்து  இணைக்கப்பட்டுள்ளது- மொ-ர் ).

ஒரு நாள், புதிதாகப் பிறந்த ஒரு குழந்தையைக் காண அந்த  மகப்பேறு மருத்துவமனைக்கு அழைக்கப்பட்டேன். என்னைப் பார்த்ததும் அந்த குழந்தையின் தாய், தனது தாய்ப்பால் வற்றிப்போய் விட்டதாகவும் , அதனால் தாய்ப்பால் அதிகரிக்க மருந்து தருமாறும் வேண்டினார். உடனே யுர்டிகா யுரேனஸ் (URT-U) மருந்தை 7C வீரியத்தில் கொடுத்தேன். அவருக்கு விரைவில் பால்சுரப்பு அதிகரித்தது. சில நாட்களுக்குப் பிறகு  அந்தத் தாயை மீண்டும் சந்தித்த போது, உங்களது தாய்ப்பால் சுரப்பு வற்றிப் போன நாளில் என்ன நடந்தது ? என்று கேட்டேன். அதற்கு அவர், எனது குழந்தையை முதன்முதலாக,  அந்த காலை வேளையில் பார்த்த போது நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். ஏனென்றால், செவிலிகள் எனது குழந்தையை என்னிடம் கொண்டு வந்து காட்டிய போது அவன் உடல் " முழுவதும் மஞ்சளாக" இருந்தது ( அவனுக்கு மஞ்சள் காமாலை நோய்  தாக்கியிருந்தது ) .  பிறகு நான் அவரது தந்தையைப் பற்றிக் கேட்டேன். அதற்கு  தனது தந்தை சில வருடங்களுக்கு முன்பு கல்லீரல் புற்றுநோய் காரணமாக இறந்து போனதாக  பதில் கூறினார்.  மேலும் , " ஒரு நாள்" அவருடைய உடல் முழுவதும் மஞ்சளாக மாறிவிட்டது, மூன்று வாரங்களுக்குப் பிறகு, அவர் இறந்து விட்டார் என்றும் கூறினார். மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்த அவரது மகனைப் பார்த்ததும் , அந்த பெண்ணிற்கு அவரது நனவிலியில்  ( UNCONSCIOUS) பதிந்திருந்த தந்தையின் மரணம்  நினைவிற்கு வந்திருக்கிறது, அதனால் அவரது தாய்ப்பால் வற்றிப் போயிருக்கிறது .

சில நாட்கள் கழித்து, நடுச்செவி அழற்சியால் (OTTIS MEDIA) பாதிக்கப்பட்டிருந்த ஒரு பையன்  சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டான். அவனது காதிலிருந்து சீழ் வழிந்து கொண்டிருந்தது,  அவனது  தந்தை  ஈளை நோய் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தார்- இந்தப் பையன் அவரின் மூத்த குழந்தை-   பொதுவாக , ஒரு குடும்பத்தின் மூத்த குழந்தை தந்தையின் பிரச்சனைகளோடு தான் பிறக்கும் ( இரண்டாவது குழந்தை தாயின் பிரச்னைகளைச் சுமந்து கொண்டு பிறக்கும், அதன் பிறகு பிறக்கும் மூன்றாவது குழந்தையிலிருந்து எதுவும் நடக்கலாம்).

அவரது தந்தையிடம் , “எத்தனை வருடங்களாக இந்த ஈளை நோய்த் தொல்லை உங்களுக்கு இருக்கிறது ?" என்று கேட்டேன். அதற்கு அவர் , தான் சிறு குழந்தையாக இருந்தபோது கரப்பான் நோய் ( சிரங்கு)  வந்ததாகவும் , அதற்கு கார்டிசோன் களிம்பு தடவிய பிறகு சில நாட்களில்  சரியாகி விட்டதாவும் கூறினார். அவருக்கு கரப்பான் நோய் தாக்கிய போது  அவரது தாயிற்கு தாய்ப்பால் வற்றிப் போயிருந்தது எனவும், அவரது அம்மாவின் தந்தை திடீரென்று இறந்துபோன தகவலை கேட்டபிறகு தான் தனக்கு தாய்ப்பால் வற்றிப் போனதாக தனது தாய் கூறியதாகவும் பதில் கூறினார். ஒரு தனிக் கருப்பொருள் எவ்வாறு தனது நோய் உருவாக்கும் விளைவுகளை அடுத்த தலைமுறைக்கு கடத்துகிறது என்பதற்கு இது ஒரு உதாரணமாக  விளங்கும் கதையாகும். 

தனி மனிதனின் நனவிலியோடு (தன்னிலை  அல்லது நான் –“I” ) குடும்ப வழியிலான , "நாம்-WE" என்ற மற்றொரு நனவிலியும் தொடர்ந்து வருகின்றன. இந்த குடும்பவழியிலான நனவிலி அனைத்து வகையான ரகசியங்கள் மற்றும் கதைகளால் நிரம்பியுள்ளது, அவை ஒரே தலைமுறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்படுகின்றன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வெவ்வேறு தலைமுறையைச் சேர்ந்தவர்கள் ஏன் ஒரே மருந்தின் மூலமாக பயனடைகிறார்கள்  என்பதை விளக்க இது உதவுகிறது.

அதே வழியில், கார்ல் யூங் விவரித்தபடி, சமூகம் முழுவதையும் பாதிக்கும் மூன்றாவது பரிமாணம் அல்லது "ஓர்மை- ONE" பற்றிய ஒரு பரந்த கூட்டு நனவிலியும் ( COLLECTIVE UNCONSCIOUS)  உள்ளது. சளிக்காய்ச்சல்  ( INFLUENZA) போன்ற தொற்றுநோய்களில் கூட்டு நனவிலி  என்பது ஒரு குறிப்பிடத்தக்க காரணியாகும், அவ்வாறு  பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களை நலமாக்குவதற்கு  அதே ஹோமியோபதி மருந்து தேவைப்படுகிறது.

ஒரு குழந்தையின் மரணத்திற்குப் பிறகு , அநேகமாக, மிக துன்பமான மன நிலை ஏற்படும் மற்றும் மனதின் ஆழத்தில் மறைந்திருக்கும்  அந்தத் துன்பம்  அடிக்கடி வெளிப்படவும் செய்யும். இதற்கான மருந்து  ஹுரா பிரேசிலியென்சிஸ் (HURA BRASILIENSIS)  -  பிரேசிலியர்களால் அசாகு (ASSACU)  என்று அழைக்கப்படும் பால் போன்ற தாவர உயிர்சாறு (SAP)  அல்லது இரப்பர் மரப்பால் ( LATEX) ஆகும்  .

இந்த மருந்து  தேவைப்படும் நபர்கள், முடக்கு வாதம் (RHEUMATOID ARTHRITIS) , போன்ற பல்வேறு மூட்டு மற்றும் கைகாலுறுப்புகள்  பிரச்சனைகள் மூலம் தங்கள் துன்பங்களை வெளிப்படுத்துகிறார்கள்.  மேலும் , முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தம் இரப்பர் மரப்பாலின்  உறைதல் பண்புகளைக் கொண்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.  ஹுரா பிரேசிலியென்சிஸ் மருந்தின்  பிறர் மீதான அன்பு நெகிழ்வுத்தன்மையுள்ள பொருள்  போன்றது-   தான்  நேசிப்பவர் எவ்வளவு தூரம்   விலகிச்  செல்ல முயற்சிக்கிறார்களோ, அவ்வளவு தூரம் வலிமையாக  அந்த நபரை ஹுரா பிரேசிலியென்சிஸ்  பின்னுக்கு இழுக்கிறது. அந்த நெகிழ்வுத்தன்மை உடையும் போது அவர்களுக்கு  நெருக்கடியின் நெருக்கடியான தருணம் ஏற்படுகிறது . தங்கள் குழந்தையின் மரணத்தை அனுபவித்த இந்த மக்கள், அவர்களது  அன்பின்  பந்தத்தில் திடீரென ஏற்பட்ட முறிவின் விளைவாக  , அவர்களது உடலில் பாதிப்பு ஏற்பட்டு ,  நெகிழ்வுத்தன்மையுள்ள இழைகளின் வழியே (அதாவது மூட்டுகளில்) தங்கள் வலியை வெளிப்படுத்துகிறார்கள்.

மேலும் ஹுரா பிரேசிலியென்சிஸ் தொழுநோயிற்கான ( LEPROSY) முக்கிய மருந்தாகவும் இருக்கிறது. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மக்களால் புறக்கணிக்கப்பட்ட மனிதர்களாக  வாழ்கிறார்கள் .  முந்தைய  காலங்களில் இந்த நோய்,  ஒரு நபர்,  அவரது சிக்கல் நிறைந்த   உறவிலிருந்து  அல்லது பிணைப்பிலிருந்து தப்பிக்க நினைத்தவர்களிடம் தோன்றியது .  ஏனென்றால் , அவர்கள் சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்படுகிறார்கள்.  அவர்களது பெற்றோர்கள் / உறவினர்கள் பெரும் துன்பத்திற்கு உள்ளாகிறார்கள் .  இறுதியாக , அதிக பளுவிற்கு உள்ளான   தங்கள் பெற்றோரிடமிருந்து அவர்கள் விலகிச் செல்கிறார்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கையை வேறு இடங்களில் அமைத்துக் கொண்டு வாழ்கின்றனர்.

ஒரு குழந்தையின் மரணத்திற்குப் பிறகு ஒருவருக்கு தோல் நிறமி இழப்பு   அல்லது வெண்புள்ளி  தோன்றினாலும் இந்தக்  ஹுராவை மருந்தாகக் கருதலாம்  , அதேபோல்  ஒரு குடும்ப உறுப்பினர் தனது மற்ற உறவினர்களை தனது சொந்த உடமையாகக் கருதி மிகவும் அதிகமாகக் நேசிக்கும் போது, தனது அன்பால் கிட்டத்தட்ட அவர்களது கழுத்தை    நெரிப்பார் . அவருக்கும் ஹுராவே மருந்து.

தங்களால் மிகவும் நேசிக்கப்பட்ட குழந்தையின் மரணத்திற்குப் பிறகு, அந்த துன்பத்திலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கும் பெற்றோர்கள் தங்களுக்கு பிறக்கும் அடுத்த குழந்தைக்கு, இறந்துபோன குழந்தையின் அதே பெயரைச் சூட்டும் வழக்கம் சமூகத்தில் நிலவுகிறது - அதன் மூலம் இறந்து போன குழந்தையினால் ஏற்பட்ட உணர்ச்சியின் பாரத்தை, அன்பின் மூலம்  புதிய குழந்தையின் மீது மாற்றிக் கொள்கிறார்கள். 

என்னிடம் சிகிச்சைக்கு வந்த ஒரு நோயாளி தன்னுடைய மகனுக்கு அவருடைய  தாத்தாவின் பெயரை வைத்திருக்கிருக்கிறார், அவர் தான் , இவரை சிறிய வயதிலிருந்து வளர்த்து வந்திருக்கிறார். சொந்த வியாபாரத்தில் ஈடுபட்ட வந்த அவரது பெற்றோர்கள் , எப்போதும் தொழிலில் கவனம் செலுத்தி வந்ததால் இவரை கவனிக்க முடியாத நிலையில் தன்னுடைய தாத்தாவின் அரவணைப்பில் தான் அவர் வாழ்ந்து வந்திருக்கிறார். அந்த தாத்தா திடீரென்று ஒரு நாள் இறந்து போனபோது , அவரால் அந்த துன்பத்திலிருந்து வெளியே வரமுடியாமல் இன்னும் தவித்து வருகிறார். அவருக்கு கல்கேரியா சிலிகா (CALC-SIL)  மருந்தாக இருந்தது. இந்த மருந்திற்குரியவர்கள், இறந்தவர்களுடனான தங்கள் உறவை முறித்துக் கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள் , தினமும் அவர்களிடம் பேசுவதற்கும், அவர்களின் பிரச்சனைகள் மற்றும் ரகசியங்களைச் சொல்லுவதற்கும் கூட அவர்களிடம்  செல்கிறார்கள்; மனதில் அவர்களது வழிகாட்டுதலை பெறுகிறார்கள் .

ஒரு பத்துவயது பெண் குழந்தையை என்னிடம் அழைத்து வந்தார்கள் , ஏனென்றால் அவள் இன்னும் தன்னுடைய  தாயின் படுக்கையிலேயே , தாயின் அருகிலேயே தூங்க விரும்புகிறாள். அவள் பிறந்ததிலிருந்து இதுவரை தாயும்-மகளும் தனித்தனியாக தூங்கியதே இல்லை. அவளுக்கு எல்லாவிதமான மனோதத்துவ சிகிச்சைகளும் கொடுத்துத்திருக்கிறார்கள் ; ஆனால் பயனில்லை.

உளப்பகுப்பாய்வின் அடிப்படையில்  தூக்கத்தை ஒரு "சிறிய மரணம்" என்றும், தூக்கத்தில் ஏற்படும் பிரச்சனைகள் தீர்க்கப்படாத மரணத்தைக் காரணமாக கொண்டுள்ளது என்பதை அறிந்த நான், அந்த அம்மாவிடம் உங்களது  சொந்த குடும்பத்தில்,  குறிப்பாக,  அதிர்ச்சிகரமான மரணங்கள் ஏதேனும் நடந்து உள்ளதா என்று கேட்டேன் , அதற்கு அவர் தன்னுடைய பதினைந்து வயதில் தனது தந்தையை ஒரு விபத்தில் இழந்ததாக என்னிடம் கூறினார். அவருடைய தந்தை  இப்போது எங்கே ? என்று  அந்த அம்மாவிடம்  நான் கேட்ட போது, அவர்  தனது வலதுபுறம் காலியாக இருந்த  இடத்தைக் காட்டி, "என் தந்தை  இங்கே இருக்கிறார் . அவர் என் பக்கத்திலிருந்து விலகிப்  போகவே இல்லை" என்று கூறினார்..

மற்றோரு ஐந்து வயதுப் பையனை என்னிடம் அழைத்து வந்தார்கள். இரவில் அவனால் படுக்கையில் தூங்க முடியவில்லை, எனக்கு பயமாக இருக்கிறது, ஏனென்றால் ஒவ்வொரு இரவும் ஒரு மனிதன் என் படுக்கைக்கு வருகிறார் என்று கூறினான். அவனின் தாய் என் பக்கம் திரும்பி , " இவன் ஆறு மாதக் கர்ப்பத்தில் இருக்கும் போது என் தந்தை இறந்து போனார் " என்று தெரிவித்தார். தாய் மற்றும் மகன் இருவருக்கும் கல்கேரியா சிலிகா 30 C மருந்தைக்  ( CALC-SIL 30 C ) கொடுத்த பிறகு எல்லாமும் சரியானது. அந்தத் தாய் என்னிடம் ," நீங்கள் மருந்து கொடுத்த அன்று இரவு, அந்த மனிதன் போய்விட்டான். அந்த மனிதன் என் தந்தை தான் என்று நீங்கள் நினைத்தீர்கள், இல்லையா? என்று கூறி புன்னகை செய்தார்.

 

மூலம் : Homeopathic Remedies for the Stages of Life, மரு.  தீதியர் கிராண்ட் ஜார்ஜ் MD

தமிழில்:  சு. கருப்பையா .

 

 

தடுப்பூசிகள்

 

தடுப்பூசிகள்

 

பெற்றோர்கள் , தங்களது குழந்தைகளை பாதிக்கும் வாய்ப்புள்ள  நோய்களிலிருந்து , அவர்களை பாதுகாக்க வேண்டுமென்றால், குழந்தை பிறந்த சில மாதங்களில் அவர்களுக்கு போடப்படும் அதிகப்படியான தடுப்பூசிகளை கட்டாயமாகத்  தவிர்க்க வேண்டும். 

 தடுப்பூசி என்பது, இறப்பைத் தரும் நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும் ஒரு வகையான காப்புறுதி போல் அடிக்கடி தெரிகிறது. ஆனால், நம்மிடம் இருக்கும் பணத்தை எல்லாம் காப்புறுதிக்காக செலவு செய்தால், உணவிற்கு செலவிடுவதற்குக் கூட நம்மிடம் பணம் இருக்காது, அதனால் நாம் இறக்க நேரிடும். இது ஒரு பாலியல் ரீதியாக பரவும் நோயைப் போன்றும் மற்றும் தவிர்க்க முடியாத கொடிய நோயிற்குள் வாழ்க்கை இருப்பதை விவரிப்பது போன்றது!

 தற்போதைய நாட்களில் , மக்களை அளவிற்கு அதிகமான தடுப்பூசிகள் போடுவதற்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. சில நாடுகளில் , பிறந்த நான்கு மாதக் குழந்தைக்குக்கூட, 19 தொற்று நோய்க்கான தடுப்பூசிகளைச் செலுத்துகிறார்கள், இது வழக்கத்திற்கு மாறானதாக இல்லையா?- அதாவது , மூன்று தவணைகளில் கல்லீரல் அழற்சி தடுப்பூசி ( Hepatitis B) , ஒரு காசநோய் எதிர்ப்புத் தடுப்பூசி (BCG)  , கூடவே மூன்று தடவை தொண்டை அடைப்பான், நரம்பு இசிவு நோய் மற்றும் கக்குவான் இருமலைத் தடுக்கும் தடுப்பூசி (DPT)  , இரத்தம் உறையாத நோய் நிலைக்கு (Hemophillia)  மற்றும்  தொடர்ச்சியான கக்குவான் இருமல் ( Whooping cough) ஆகிவற்றை இணைப்பதாக இந்த தடுப்பூசிகள் இருக்கின்றன.

இத்தகைய அத்துமீறல்களை நிறுத்துவது அவசியமாக இருக்கிறது, ஏனென்றால் இந்த தடுப்பூசிகள் உடலினுள்ளே இருக்கும் நோய்த்தடுப்பாற்றலில்  பாதிப்பை உருவாக்கி அதன் மூலம் ஈளை நோயை ( ASTHMA) உற்பத்தி செய்கிறது. மூச்சுத்திணறல் மற்றும் நெரிசலான நுரையீரலுடன் கூடிய ஈளை நோய், சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் சிகரெட் புகையின் வெளிப்பாடு ஆகியவற்றால் அதிகமாகிறது என்று குற்றம் சாட்டப்படுகிறது, ஆனால் , பொதுவாக இந்த நிலை முதலில் செலுத்தப்பட்ட  தடுப்பூசிகளால் தூண்டப்படுகிறது.

 சில மனிதர்கள் , பகுத்தறிவிற்கு ஒவ்வாதது என்று எல்லா தடுப்பூசிகளையும் மறுக்கிறார்கள். இவ்வாறு தடுப்பூசிகளிலிருந்து விலகியிருக்கும் சிலர், இயற்கையாக கிடைக்கும் உணவுகள் மற்றும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். அதாவது, இவர்கள் கல்கேரியா சிலிக்காட்டா (CALC-SIL) மருந்திற்குரியவராக இருக்கிறார்கள். இவர்கள்,  மிக நீண்ட நாட்களுக்கு முன்பு இறந்த போன, தங்களுக்கு நெருக்கமாக இருந்த மனிதர்களை நினைவில் வைத்துக் கொண்டு வாழ்கிறார்கள் - அதாவது அவர்களிடம் மனரீதியாக தங்களது  பிரச்சனைகளை சொல்லி  அவர்களின் ஆலோசனைகளை கேட்கிறார்கள் . மற்றும் சிலர் , தடுப்பூசிகள் போட்டபிறகு ஆபத்தான நோய்களுக்கு உள்ளான தங்களது குடும்ப உறுப்பினர்களைப் பார்த்த பிறகு,  அதிலிருந்து விலகி இருக்க விரும்புகிறார்கள். இந்த சூழ்நிலையில் நமக்கு தூஜா (THUJ) , சிலிகா ( SIL) அல்லது சல்பர் (SULPH) போன்ற மருந்துகள்  நினைவிற்கு வரும்.

 

சில மனிதர்கள் மேற்கூறிய  நிலைக்கு எதிராக இருப்பார்கள் மற்றும் புழக்கத்தில் இருக்கும் எல்லா தடுப்பூசிகளையும் போட்டுக்கொள்ள விரும்புவார்கள். உதாரணமாக , ஆர்சனிக்கம் ஆல்பம் ( ARS) மனிதர்கள், தன்னை சாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள என்ன விலை கொடுத்தாவது மருத்துவம் செய்து கொள்வார்கள்.

ஆனால், குழந்தை பிறந்தவுடனே தடுப்பூசிகள் போடுவது பயனற்றது ஆகும் . ஏனென்றால், குழந்தை பிறந்து  ஒன்பது மாதங்கள் வரை , அக்குழந்தை பிறப்பதற்கு முன்பு   தாயின் நஞ்சுக்கொடி அல்லது கருக்குடையிலிருந்து பெறப்பட்ட நோயெதிர்ப்புப்பொருள் அவர்களை நோய்த் தாக்குதலிலிருந்து  பாதுகாக்கிறது (தாய்ப்பாலில் உள்ள நோயெதிர்ப்புப்பொருள்  செரிமான மண்டலத்தை இரைப்பை குடல் அழற்சிக்கு எதிராக பாதுகாக்கும் போது) .

தொடர்ச்சியான கக்குவான் இருமலுக்குப் போடப்படும் தடுப்பூசி பல ஆபத்துகளை சுமந்து செல்கிறது [மூளை அழற்சி போன்ற நோய் ( ENCEPHALITIS)] மற்றும் ஈளை நோய் உருவாவதற்கு காரணமாக இருக்கிறது. எனவே ஏற்கனவே சமூகமயமாக்கபட்டிருக்கும்  குழந்தைகளுக்காக இந்தத் தடுப்பூசி ஒதுக்கப்பட வேண்டும். அதனால் , குழந்தையின் ஒரு வயது வரை ,அவர்களை நோயிலிருந்து பாதுகாக்க இரண்டு தடுப்பூசிகள் மட்டுமே போதுமானதாக இருக்கும்- அதாவது , தொடர்ச்சியான கக்குவான் இருமல் ஏற்பட்டு ஆபத்தான நிலை உருவாகும் போது மட்டும் இந்த தடுப்பூசியை போடவேண்டும்.  இருந்தாலும் , குழந்தையின் குடும்ப வரலாற்றில் வலிப்புநோய்கள் அல்லது ஈளை நோய் போன்ற நோயச்சார்பு  அல்லது குழந்தைப் பிறப்பில் சிக்கல்கள் இருந்திருந்தாலும் , இந்த தொடர்ச்சியான கக்குவான் இருமலுக்குப் போடப்படும் தடுப்பூசியை முழுவதுமாக தவிர்க்க வேண்டும்.  ஆனாலும், தடுப்பூசி போட்டபிறகு தொடர்ந்து இருமல் இருந்தால், நாம் கொடுக்க வேண்டிய முதல் மருந்து கார்போ வெஜிடபிலிஸ் 30 C  (CARB-V) ஆகும், இது இருமலை சீர்படுத்தி உடலுக்கு சமநிலையைக் கொடுக்கிறது.

காசநோய் எதிர்ப்புத் தடுப்பூசி (BCG)  பற்றி ஆராயும் போது, இதன் செயல்படும் திறன் இன்னும் நிரூபிக்கப்படாவிட்டாலும், இது ஈளை நோய் மற்றும் ஒவ்வாமை ஆகியவற்றை தூண்டுகிறது என்று நன்றாக அறியப்படுகிறது . காசநோய் எதிர்ப்புத் தடுப்பூசி (BCG)  போட்டுக் கொண்டபிறகு, சிலிகா ( SIL) நோயாளிக்கு ஒரு காயம் ஏற்பட்டால் அது சீழ்ப்பிடித்தலை  உருவாக்குகிறது மற்றும் நலமடைய மறுக்கிறது. சீழ் உருவான பிறகு அதில் உயிரோடு இருக்கும்  காசநோயின் நுண்ணுயிரிகள் , அவருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் ஒவ்வொருவருக்கும் தொற்று உண்டுபண்ணக்கூடிய ஆபத்து இருக்கிறது- குறிப்பாக, நோயெதிர்ப்பாற்றல் குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கும் எய்ட்ஸ் நோயாளிகள் மற்றும் தொற்றுநோயைத்  தணிக்கும் மருந்துகளை எடுத்து வருபவர்களுக்கும் அல்லது சிறுநீரக வெளியேற்றம் /சிறுநீர்ப்பை சுரப்பு ஆகியவற்றிக்காக மருத்துவச் சிகிச்சையில் இருப்பவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.  அத்தகைய நோயாளிகளுக்கு வெளிப்பகுதியில் காசநோய் எதிர்ப்பு மருந்து மற்றும் நுண்ணுயிரியின் வளர்ச்சியைத் தடுக்கும் களிம்புகள் ஆகியவற்றை  உபயோகிக்க வேண்டும், அத்துடன் உடலின் உள்ளுக்குள் சிலிகா (SIL 15-30C) மற்றும்  டியூபர்குலினம் ( TUB 15-30C) மருந்துகளை சில தடவைகள் கொடுக்க வேண்டும். 

 

இறுதியாக , குழந்தைகளுக்கு தட்டம்மை (MEASLES) , மணல்வாரி  [ RUBELLA (ஜெர்மனி நாட்டின்)] மற்றும் பொண்ணுக்கு வீங்கி  அல்லது தாளம்மை (MUMPS) போன்ற நோய்களுக்கு எதிராக தடுப்பூசி போட வேண்டுமா? என்ற கேள்வி எழுகிறது. முதலில், ஒன்றுக்குகொன்று சம்பந்தமில்லாத  இந்த மூன்று நோய்க் கிருமிகளையும் ஒன்றாக இணைத்து,  ஒரே தனித்த தடுப்பூசியாக போடுவது முற்றிலும் இயற்கைக்கு முரணாக இருக்கிறது. இரண்டாவதாக, நோய் வரும் வரை  இந்த தடுப்பூசியால் பாதுகாக்க முடியாது. மற்றும் மூன்றாவதாக, இந்த தடுப்பூசி வலுவற்றதாக இருப்பதால் மிக எளிதாக அழிக்கப்பட்டுவிடும் உதாரணமாக அதிகப்படியான வெப்பத்திற்கு இலக்காகும் போது இந்த தடுப்பூசி வலுவிழந்துவிடும். வேறு வார்த்தையில் கூறுவதென்றால் , தடுப்பூசி போடுவதன் மூலம் பெருவாரியாக பரவுகின்ற தொற்று நோய்களான தட்டம்மை (MEASLES) , மணல்வாரி   மற்றும் பொண்ணுக்கு வீங்கி  அல்லது தாளம்மை  போன்ற நோய்களை வளர்ந்த மக்களிடம் உருவாக்கும்  ஆபத்தை செய்கிறோம்,  அதாவது, இத்தகைய நோய்களை சகித்துக் கொள்ளும் திறன் குறைந்தவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். மேலும், குழந்தை பருவ நோய்களை  தடுப்பூசிகளால் முற்றிலும் அழிக்கப்படுவது பெரும்பாலும் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கிறது மற்றும் மாற்றுகிறது. இது முழு சமூகத்தையும் பாதிக்கும் ஒரு பிரச்சனையாகும், எனவே இன்று இருக்கும் நிலையை கவனத்தில் கொண்டு, இது பற்றி மிகவும் விரிவாக விவாதிக்கப்பட வேண்டும்.

 என் கருத்துப்படி, மற்ற அனைத்து தடுப்பூசிகளும் தேவைக்கு அதிகமானவை , உதாரணமாக,   மூளைக்காய்ச்சல். இது,  உலகின் பல பகுதிகளில் அரிதாக இருப்பது மற்றும் பொதுவாக  இதற்கான தடுப்பூசி பெரிய குழுக்களில் வாழும்  குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கல்லீரல் அழற்சி தடுப்பூசியைப் பொறுத்தவரை, பிரான்சில் கடந்த இருபது ஆண்டுகளாக குழந்தைகள் மருத்துவராக பணி  செய்து வந்தாலும் ,  கல்லீரல் அழற்சியினால் பாதிக்கப்பட்ட,  பதினான்கு வயதிற்கு கீழுள்ள ஒரு குழந்தையைக் கூட நான் காணவில்லை. மேலும் கூறுவது என்னவென்றால், இந்த மரபணு ரீதியாக தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் நம்பகத்தன்மை வாய்ந்த பாதுகாப்பிற்கான  உத்தரவாதத்தை இன்னும் கொண்டிருக்கவில்லை மற்றும் தண்டுவட மரப்புநோய்  , பார்வை பிரச்சினைகள், பல்வேறு தன்னியக்க நோயெதிர்ப்பு நோய்கள் அல்லது தன்னுடல் தாக்கு நோய் மற்றும் நீரிழிவு போன்ற பல பக்க விளைவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

 

மூலம் : Homeopathic Remedies for the Stages of Life, மரு.  தீதியர் கிராண்ட் ஜார்ஜ் MD

தமிழில்:  சு. கருப்பையா , மதுரை.