Saturday 14 July 2012

ஆர்கனான் மணிமொழி-7


§ 7

Now, as in a disease, from which no manifest exciting or maintaining cause (causa occasional is) has to be removed*, we can perceive nothing but the morbid symptoms, it must (regard being had to the possibility of a miasm, and attention paid to the accessory circumstances, § 5) be the symptoms alone by which the disease demands and points to the remedy suited to relieve it - and, moreover, the totality of these its symptoms, of this outwardly reflected picture of the internal essence of the disease, that is, of the affection of the vital force, must be the principal, or the sole means, whereby the disease can make known what remedy it requires - the only thing that can determine the choice of the most appropriate remedy - and thus, in a word, the totality** of the symptoms must be the principal, indeed the only thing the physician has to take note of in every case of disease and to remove by means of his art, in order that it shall be cured and transformed into health.

* It is not necessary to say that every intelligent physician would first remove this where it exists; the indisposition thereupon generally ceases spontaneously. He will remove from the room strong-smelling flowers, which have a tendency to cause syncope and hysterical sufferings; extract from the cornea the foreign body that excites inflammation of the eye; loosen the over-tight bandage on a wounded limb that threatens to cause mortification, and apply a more suitable one; lay bare and put ligature on the wounded artery that produces fainting; Endeavour to promote the expulsion by vomiting of belladonna berries etc., that may have been swallowed; extract foreign substances that may have got into the orifices of the body (the nose, gullet, ears, urethra, rectum, vagina); crush the vesicle calculus; open the imperforate anus of the newborn infant, etc.

** In all times, the old school physicians, not knowing how else to give relief, have sought to combat and if possible to suppress by medicines, here and there, a single symptom from among a number in diseases - a one-sided procedure, which, under the name of symptomatic treatment, has justly excited universal contempt, because by it, not only was nothing gained, but much harm was inflicted. A single one of the symptoms present is no more the disease itself than a foot is the man himself. This procedure was so much the more reprehensible, that such a single symptom was only treated by an antagonistic remedy (therefore only in an enantiopathic and palliative manner), whereby, after a slight alleviation, it was subsequently only rendered all the worse.

உடனே, ஒரு நோய் ஏற்படுகிறது, அதைத் தூண்டக்காரணம் எதுவும் இல்லை அல்லது அதை நீடிக்கச் செய்யும் காரணமும் இல்லை ஆனாலும் அவற்றை நீக்க வேண்டும்-3. அப்பொழுது கண்ணுக்குத் தெரியாத நோயுற்ற அறிகுறிகளைத் தவிர வேறு எதையும் நாம் உணர முடியாது, ( நோய்மூலக்கூறு இருப்பதற்கான  சாத்தியம் மற்றும் துணை சூழ்நிலைகளுக்கு  ஏதாவது  வாய்ப்புகள் இருந்தால் அவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும், § 5), இந்த நிலைமையில் அந்த நோயை நீக்கும்  மிகச் சரியான மருந்தைத் தேர்தெடுக்க  உதவுவது, உள் உறுப்புகளில் ஏற்படும் நோயின் சாராம்சத்தை அதாவது உயிர்ப்புசக்தி பாதிப்பை ( Vital  Force = உயிர்ப்புசக்தி அல்லது உயிராற்றல் ), புற உறுப்புகளில் வெளிப்படும் ஒட்டுமொத்தக் குறிகள்  ( Totality  of symptoms )-4 தான். மருத்துவர்தன் நலமாக்கும் கலை நுட்பத்தால் ஒவ்வொரு நோயிலும் உள்ள இந்த ஒட்டுமொத்தக் குறிகளையும் கவனத்திற்க் கொண்டே  மருந்து தேர்ந்தெடுத்துக் கொடுத்து நோய்த் தன்மையை நீக்கி துயரரை நலத்திற்கு கொண்டு வர வேண்டும்.    


*ஒவ்வொரு அறிவாளியான மருத்துவரும், தூண்டுதல் அல்லது அப்போது நிலவி வரும் காரணங்களை, அது இருக்குமிடத்தை அறிந்து நீக்கினால் துயர் தானாக நீங்கும் என்பதை சொல்ல வேண்டிய அவசியமல்லை. அத்தகைய மருத்துவர் , மனபிறழ்ச்சி மற்றும் மயக்கம் ஏற்படும் தன்மையைத் தோற்றுவிக்கும் அதிக மணம் பொருந்திய மலர்களை நோயாளியின் அறையிலிருந்து நீக்கிவிடுவார். அதேபோல் கண்ணில் விழுகின்ற தூசி, அழற்சியை ஏற்படுத்தும் என்பதால் அதனை உடனே அகற்றிவிடுவது, காயமுற்ற உறுப்பின் மீது இறுக்கமாகக் கட்டப்பட்டிருக்கும் கட்டுகளைத் தளர்த்தி வேறு பொருத்தமான சிகிச்சை அளிப்பது-ஏனெனில் இருக்கமான் கட்டு செல்களைச் சாகடித்து  விடும். இரத்தத் தமனி துண்டிக்கப் பட்டபோது அதனைக் கட்டுக்கட்டி சீர் செய்து மயக்கம் வராமல் தடுப்பது. நச்சுப்பொருட்களை  ( Belladonna  Berries -போன்ற )   உண்டவர்களை வாந்தி எடுக்கசெய்வது , உடலில் உள்ள திறந்த துளைகள் வழியாக உள்ளுக்குள் சென்று விட்ட அந்நியப் பொருட்களை வெளியேற்றுவது , வீங்கிப் புடைத்துவிட்ட நரம்புகளை நசுக்கி விடுவது, ஆசன வாயில் துவாரம் இல்லாமல் பிறக்கும் குழந்தைகளுக்கு துவாரம் ஏற்படுத்திக் கொடுப்பது போன்ற கண்ணுக்குப் புலப்படும் தொல்லைகளையும் ஒரு புத்திசாலியான மருத்துவர் சரி செய்துவிடுவார். 


பழைய மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த மருத்துவர்களுக்கு (அலோபதியர்கள் ) நோயை  எவ்வாறு குணப்படுத்துவது  என்று எந்தக் காலத்திலும்  தெரியாது. இவர்கள் " குறிகளின் அடிப்படை"யில் தான் நாங்கள் மருத்துவம் செய்கிறோம் என்று சொல்லிக் கொண்டு இங்கொன்றும் அங்கொன்றுமாய் தெரியும் ஒற்றைக் குறிகளுக்கு ஒரு தலைப் பட்சமாக மருந்து கொடுத்து நோயை உள்ளமுக்கி விடுகிறார்கள். இதனால் அவர்களுக்கு எந்த இலாபமும் இல்லை. மாறாகத் துயரருக்குத் தான் அதிக தீங்கு செய்கிறார்கள். ஒற்றைக் குறிக்கு தரப்படும் மருந்து எதிரும் புதிருமானது. இவ்வாறு ஒற்றைக் குறியை மட்டும் கருத்தில் கொண்டு மருந்து தேர்வு செய்து கொடுப்பது " ஒற்றைக் கால் மட்டுமே உள்ள மனிதனை முழுமனிதன் என்று கூறுவது போன்றதாகும்." எனவே,  இத்தகைய சிகிச்சைமுறை துயரரை மட்டுப் படுத்தும் வகையில் மட்டுமே செயல்படும். தொடக்கத்தில் நலமாவது போல் தோன்றினாலும் பின்னர் மீண்டும்  மோசமான நிலையை ஏற்படுத்தும். 

Monday 2 July 2012

மரு.கான்ஸ்டான்டைன் ஹெர்ரிங்

 
மரு. .கான்ஸ்டான்டைன் ஹெர்ரிங்
தோற்றம்: 01-01-1800
மறைவு: 23-06-1880

உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடும் பொழுது ஒவ்வொரு ஹோமியோபதியருக்கும் நினைவுக்கு வருவது மாபெரும் மருத்துவர் ஹெர்ரிங்  அவர்கள் தான்.  ஆம் !  19 ஆம் நூற்றாண்டில் , அமெரிக்காவில் ஹோமியோபதியை முழுவீச்சில் செயல் படுத்தியதால்        "அமெரிக்க ஹோமியோ மருத்துவத்தின் தந்தை " என்று இவர் அழைக்கப்படுகிறார்.   . இவர் ஹோமியோபதிக்கு வந்தது மிகவும் சுவாரசியமான  கதை.

ஹெர்ரிங் தமது 17 வது வயதில் மருத்துவம் பயிலுவதற்காக  "  சர்சிகல் அகாடமி அப் டிரிஸ்டன் ”  இல் சேர்ந்து படிப்பு முடிந்தவுடன்  கி.பி 1820 இல் லீப்சிக் பல்கலைகழகத்தில் சேர்ந்தார். அங்கே அவருக்கு ஆசிரியராக இருந்தவர் பிரபல மருத்துவ சிகிச்சை நிபுணர் மரு. ஹென்ரிச் ராபி.  இவர் மாமேதை ஹானிமனுக்கும்  அவரின் கண்டுபிடிப்பான ஹோமியோபதிக்கும் கடுமையான எதிரியாகத் திகழ்ந்தவர்.

கி.பி 1821 இல்  மாமேதை ஹானிமன் ஹோமியோபதியை தீவிரமாக செயல்படுத்திக் கொண்டிருக்கும் போது அதற்கு இணையாக கடுமையான எதிர்ப்பும் வலுத்திருந்தது . லீப்சிக் நகரின் பிரபல பத்திரிக்கையாளர் திரு.பாம் கார்ட்னர்   ( C.BAUMGARTNER)  ஹோமியோபதியை ஒழித்துக் கட்டும் நோக்கத்தில் ஒரு புத்தகம் எழுதுமாறு  மரு.ராபியை அணுகினார். அவருக்கு நேரம் இல்லாத காரணத்தால் அப்பணியை அவரின் சிறந்த மாணவரான ஹெர்ரிங் வசம் ஒப்படைத்தார்.   மகிழ்ச்சியுடன் அப்பணியை ஏற்றுக்கொண்ட ஹெர்ரிங் , ஒன்றைப்பற்றி விமர்சிக்கும் முன்பு அதைப் பற்றிய ஆழ்ந்த ஞானம் இருக்க வேண்டும் என்ற தமக்கே உரிய சிறப்பு குணத்திற்கு இணங்க ஹோமியோபதி செயல்படும் விதம் பற்றியும் அதன் தத்துவார்த்த பின்னணி பற்றியும் கற்க ஆரம்பித்தார்.


மாமேதை ஹானிமனின் கட்டுரைகளையும் , மருந்து நிருபணங்களையும் சேகரித்து நுணுக்கமாக ஆராய்ந்தார்சின்கோனா ( CHINA ) மருந்தினை உட்கொண்டு மறுபடியும் நிருபணம் செய்து ஹானிமனின் பரிசோதனை சரிதான் என்று உறுதியும் செய்தார். ஹோமியோபதியின் மேல் அவருக்கு திருப்தியும் நம்பிக்கையும் ஏற்பட்டது. ஹோமியோபதிக்கு எதிராக எழுதுவதற்கு எந்தக் கருதும் இல்லாமல் போய்விட்டது. இத்தருணத்தில் ஹெர்ரிங் அவர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் விதமாக ஒரு நிகழ்ச்சி நடந்தது .


கி.பி. 1824 இல்  ஹெர்ரிங் ஒரு சவத்தை அறுத்து பரிசோதனை செய்த பொழுது அவரது வலது கை கட்டைவிரலில் காயம் ஏற்பட்டு, பின்னர் சீழ்பிடித்து கடுமையான புண்ணாக மாறிவிட்டது. அவரது காயத்தைப் போக்கும் ஆற்றல் எந்த பாரம்பரிய மருந்திற்கும் ( அலோபதி)  இல்லாமல் போய்விட்டது. அவரது கட்டைவிரலை எடுக்க வேண்டிய நிலை. அச்சமயத்தில் ஹானிமனின் மாணவர்களில் ஒருவரான மரு . .கும்மர் ( kummer)  ஹெரிங்கை பரிசோதித்து சரியான ஹோமியோபதி மருந்தான  ஆர்சனிகம் ஆல்பத்தை கொடுத்தார். சில வேலை மருந்து உட்கொண்ட பின்னர் காயம் முழுமையாக நலமாகி குணமடைந்தார். அவரது கட்டைவிரல் காப்பாற்றப்பட்டது.


இந்நிகழ்ச்சி ஹெர்ரிங் அவர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தையும், ஹோமியோபதியின் மீது ஆர்வத்தையும் ஏற்படுத்தியது . உடனடியாக தான் ஹோமியோபதிக்கு மாறிவிட்டதாக அறிவித்தார். கி.பி.1826 இல் லீப்சிக் பல்கலைகழகத்தில் மருத்துவப் பட்டம் பெறும்போது அவர் சமர்பித்த " எதிர்காலத்திற்கான மருந்துகள் " ( On the medicine of the future) என்ற ஆய்வுக் கட்டுரை ஹெர்ரிங்  ஹோமியோபதிக்கு முழுமையாக மாறிவிட்டதை உறுதி செய்தது.  அதன் பின்னர் நடந்தவைகளை உலகமே அறியும். ஆம்! லாச்சசிஸ் தொடங்கி காந்தாரிஸ், கோல்சிகம், மெசீரியம், சோரினம், ஆபிஸ், ஜெல்சீமியம் போன்ற 72  மருந்துகளை நிருபணம் செய்தார் மரு.ஹெர்ரிங்.

கி.பி. 1833 இல் அமெரிக்கா சென்று அங்கே பிலடெல்பியாவில் தங்கினார். கி.பி.1848 இல் " ஹானிமன் மருத்துவக் கல்லூரி"யை தொடங்கி தமது மருத்துவ சேவையினை தொடர்ந்தார். இக்கல்லூரியே உலகம் முழுவதுமுள்ள ஹோமியோபதி மருத்துவ கல்லூரிகளில் மிகச் சிறந்தது என்று இன்று வரை கருதப்படுகின்றது. ஹெர்ரிங் மற்றும் அவரது மாணவர்களும் சேர்ந்து ஆண்டிற்கு 50000 துயரர்களை நலமடைய செய்ததோடு மட்டுமல்லாமல்  3500 ஹோமியோபதியர்களையும் உருக்காகினார்கள். மரு. ஹெர்ரிங் தமது அனுபவங்களையும் , மருந்துகளையும் " வழிகாட்டும் குறிகள் " என்ற தலைப்பில் (Guiding Symptoms) பதிவு செய்ய ஆரம்பித்தார். அவை, " மருந்துகாண் ஏட்டின் வழிகாட்டும் குறிகள் " என்ற தலைப்பில் இரண்டு தொகுதிகள் கி.பி. 1879 இல்    வெளிவந்தன. மற்ற எட்டு தொகுதிகளும் அவரது மாணவர்களால் கி.பி.1891 இல்  அவரது மறைவிற்குப் பிறகே வெளியிடப்பட்டன.

ஹெர்ரிங் மிகவும் நேர்மையான குணத்திற்குக் சொந்தக்காரர் . தமது கடமையில் சரியாக இருக்கவேண்டும் என்று நினைத்தவர். கி.பி. 1880 இல் அதாவது  23/06//1880 ந் தேதி  தான் இறப்பதற்கு சில மணித்துளிகளுக்கு முன்பு வரை கொட்டும் பனியில்  ஒரு இதய நோயாளியை பார்த்துவிட்டு வந்து  இரவு பத்து மணிக்கு மேல் இறந்தார் எனபது நெஞ்சை நெகிழச்செய்யும் செய்தி. இத்தகைய மகத்தான பணியினை செய்த மரு.ஹெர்ரிங் அவர்களுக்கு ஹோமியோபதி உலகம் என்ரெண்டும் நன்றிக்கடன் பட்டுள்ளது. அவருக்குமட்டுமல்ல.  அவரை ஹோமியோபதிக்கு தாரை வார்த்த    மரு.ராபிக்கும் சேர்த்துதான்.