Friday 13 June 2014

ஹோமியோபதி நன்முத்துக்கள் -3


1.    திடீரென இருதயச் செயலிழப்பு ஏற்படும் சமயத்தில் , பல துயரர்களுக்கு ஆர்சனிக்கம் ஆல்பம், ஆண்டிமோனியம் டார்ட், கார்ப்போ   வெஜிடபில்ஸ் மற்றும் ஆக்ஸாலிக் ஆசிட் மருந்துகள் மிகவும் நன்றாக வேலை செய்யும்.  
-       Dr. Douglas Borland

2.    மன வேலையின் காரணமாக தண்டுவடத்தில் எரிச்சல் ஏற்பட்டாலும் , இலேசாக படிக்க ஆரம்பித்தவுடன் தண்டுவடத்தில் வலி ஏற்பட்டாலும் அந்தத் துயரருக்கு பிக்ரிக் ஆசிட் கொடுக்க வேண்டும். 
-       M.L. Tyler

3.    நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் போது, வாத நோய்க்குறிகள் உடனுறையும் குறிகளாக இருந்தால் கொடுக்க வேண்டிய மருந்து லாக்டிக் ஆசிட்.
-       Dr. E. B. Nash

4.    உதட்டில் புற்றுநோய் ஏற்பட்டு , வாயின் மூலை ஓரங்களில் வலியுள்ள வெடிப்புகள் இருந்தால் அந்தத் துயரருக்கு கோண்டுரங்கா கொடுக்கவேண்டும்.
5.    Dr. Burnett

6.    இரவில்தூங்கிக்கொண்டிருக்கும் போது வலிப்பு ஏற்பட்டால்  உங்களுக்கு புபோ ரானா மருந்து  ஞாபகத்திற்கு வர வேண்டும். 
-       Dr. Lippe

7.    இருதயம் பலவீனமாக இருந்தும், நீண்டகாலமாக நுரையீரலும் பாதிக்கப்பட்டிருந்தால் ஆர்சனிக்கம் அயோடட்டம் கொடுக்கவேண்டும்.
-       Dr. J. H. Clarke

8.    இரத்தப்போக்கை உருவாக்கும் மூலநோயாக இருந்தாலும் அல்லது குருட்டு மூலமாகவும் இருந்தாலும் இரத்தப்போக்கு ஏற்படுவதால் துயரர் நலமாக இருந்தால் ஆஸ்குலஸ் ஹிப்போ கொடுக்க வேண்டும்.  அதே போல் இடுப்புப் பகுதிகளில் வலியுடனும் அசைய முடியாத வகையில் விறைப்பாகவும் , சுத்தமாக நடக்க இயலாத நிலையிலும்   துயரர் இருப்பார்.  
9.    -Dr. J. H. Clarke

10.  பல் பிடுங்கியவுடன் ஏற்படும் இரத்தப்போக்கை  உடனடியாக நிறுத்த காலண்டுலா கொடுக்க வேண்டும்.  
-       Dr. Niranjan Mohanty

11. சிறிது அசைந்தாலும் இருதயம் துடிப்பதை நிறுத்திவிடும் என்ற உணர்வு- டிஜிடாலிஸ்.

12. அசைந்துகொண்டிருக்க வேண்டும் அல்லது நடந்து கொண்டிருக்க வேண்டும் , இல்லாவிடின் இருதயம் துடிப்பதை நிறுத்திவிடும்- ஜெல்ஜிமியம்.

13. தாங்க முடியாத வலி: அகோனைட் , ஆர்சனிக்கம் ஆல்பம், சாமொமில்லா , காபியா குருடா , ஹீப்பார் சல்ப், ஹைப்பெருக்கம், பைட்டோலக்கா , பைப்பர் மித், இக்னேசியா .  வலி இருக்கும் போது மூர்க்கத்தனமான அல்லது பயங்கரமான நடவடிக்கைகள்:  ஆரம் மெட்டாலிக்கம், சாமொமில்லா , ஹீப்பார் சல்ப்.
-       R. Murphy

14.  தேள் கடிக்கு சிறந்த மருந்து லேடம்பால்-200. கொட்டும் வலி குறையும் வரை ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை கொடுக்க வேண்டும். மேலும் விஷத்தன்மை வாய்ந்த எல்லா பூச்சிக் கடிக்கும் இம்மருந்து பயனளிக்கும். அதேபோல் , பூச்சி கடித்தவுடன் விரைவாக வீக்கமும் , வலியும் ஏற்ப்பட்டால் அபிஸ் -30 மருந்தும் தேவைப்படும்.
-       Dr. VK Krishnamoorty

15.  புண்களை குளிர்ந்த நீரால் கழுவும் போது வலிகள் குறைந்து நன்றாக இருந்தால் அவருக்கு புளுவாரிக் ஆசிட் கொடுக்க வேண்டும். 
-       Dr.N.M. Chouduri


16.  சிறிய குழந்தைகளுக்கு மருந்தளிக்கும் போது அக்குழந்தை , தாயின் கருவில் இருந்த பொழுது தாயிடம் தோன்றிய அல்லது உருவான குறிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உதாரணமாக தாய் கர்ப்பமாக இருந்த போது பயந்திருந்தால் அகோனைட் கொடுக்க வேண்டும், அதேபோல் கவலை ஏற்பட்டிருந்தால் இக்னேசியா தேவைப்படும்.
-       George Delaney – Ireland
17.  சிவப்புக்கலரின் மீது வெறுப்பு: அலுமினா
18.  நீலக்கலரின் மீது வெறுப்பு: டெரண்டுலா
19. கறுப்புக்கலரின் மீது வெறுப்பு: ஸ்டிராமோனியம், டெரண்டுலா, ரோபினா.
20. பச்சை, சிவப்பு மற்றும் நீலம் கலர்களை விரும்பினால்; டெரண்டுலா
-       Robin Murphy

21.  குழந்தைகளுக்கு ஐஸ் கிரீம் சாப்பிட்ட பின்னர் இரைப்பை அழற்சி ஏற்ப்பட்டால் ஆர்சனிகம் ஆல்பம் தான் மருந்து.அதேபோல் பழமும் , ஐஸ் கிரீமும் கலந்து சாப்பிடுவது குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
-       Dr. D.M. Borland

22. கோபத்திற்குப் பிறகு பேச்சாற்றல் இழப்பு: ஸ்டாபிசாக்கிரியா
23.  பெரும் பயத்திற்குப் பிறகு பேச்சாற்றல் இழப்பு: அகோனைட், ஒபியம், ஜெல்ஜிமியம்.
24.  கவலையினால் தலை வழுக்கை: பாஸ்பாரிக் ஆசிட்.
25. கோபத்திற்குப் பிறகு தலைசுற்றல்  : அகோனைட், கல்கேரியா கார்ப் .
26. பெரும் பயத்திற்குப் பிறகு தலைசுற்றல்  : அகோனைட்,  ஒபியம், க்ராடுலஸ்.
-       Dr. K.N.Mathur

27.  கண்களில் ஏற்படும் நிறக் கோளாற்றை சரி செய்வது கடினம் என்றாலும் கார்போனியம் சல்பூரட்டம் பலசமயங்களில் பலன் தந்துள்ளது.
-      Dr. P. Rajagopalarao.

28.  அறுவை சிகிச்சைக்குப் பிறகு சிறுநீர் வெளியேறாமல் உள்ளேயே தங்கி விடும் நிலையில் அடிக்கடி தேவைப்படும் மருந்து காஸ்டிகம்- Dr. D.M. Foubiser

29.  விரல்களில் அடிபட்டு நசுங்கி விடும் நிலையில் ஹைப்பெரிக்கம் மருந்திற்கு இணையானது வேறெதுவுமில்லை - Dr. E.A. Farrington

30.  அடிவயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டபிறகு ஏற்படும் விக்கலுக்கு ஹையாசியமஸ் ஒரு சிறந்த மருந்து- Dr. E.A. Farrington
31.  சிறுநீரகக் கற்களை வெளியேற்றுவதற்கு மிகச் சிறந்த மருந்து பெரிபரிஸ் வல்கரிஸ்- Dr. E. A. Farrington

32.  பித்தப்பையில் உருவாகும் பித்தக்கற்களை வெளியேற்றுவதற்கு சரியான மருந்து கொலஸ்டீரினம்- Dr. Pulford  

33.  மாதவிடாயின் போது ஏற்படும் கடுமையான வலியைப் போக்குவதற்கு நமக்கு அடிக்கடி தேவைப்படும் மருந்து மெக்னீசியம் பாஸ்- Dr. M.L.Tyler

34.  அளவிற்கு அதிகமாக பிடிவாதம்  பிடிக்கும் குழந்தைகளுக்கு பெரிதும் தேவைப்படும் மருந்து டுபர்க்குலினம்- Dr. D.M. Foubister

35.  மூக்கடி சதை வளர்ச்சிக்கு (ADENOIDS) , ஏறத்தாள 100 துயரர்களுக்கு டுபர்க்குலினம் கொடுத்து நலப்படுத்தியுள்ளேன்- Dr. J.T. Kent

36.  ஆண்பால் உறுப்புக்கு  உடன் இணைவான பெருஞ்ச்சுரப்பித் திரளில் (PROSTATE) வீக்கம் ஏற்பட்டுபெருத்து தொல்லை கொடுத்தால்  நமக்கு தேவைப்படும் மருந்து ஹைட்ராஞ்சியா- Dr. A.H. Grimmer

37.  முகப்பருக்களுக்கு அனைவரும் தேர்ந்தெடுக்கும் மருந்தாக இருப்பது காலி புரோமோட்டம் 30 - Dr. J.H. Clarke.

38.  கண்களை பயன்படுத்தி அதிகம் வேலை செய்ததால் ஏற்படும் தலைவலிக்கு ரூடா  ஒரு சிறந்த மருந்து. அதேபோல்  Onosmodium என்ற மருந்தையும் கொடுத்து பல துயரர்களை நலப்படுத்தி உள்ளேன்- Dr. Franz Hartmann.

39.  மின்சார தாக்குதலின் போது இதயத் துடிப்பு நின்று போன நிலையிலும் கூட ஆர்னிகா மிக உயர்ந்த வீரியத்தில் கொடுத்து அவரை நலப்படுத்தலாம். அதேபோல் முகம் வெளுத்து நாடித் துடிப்பு மங்கிவரும் நிலையில் பாஸ்பரஸ் கொடுக்கலாம்-  Alan V. Schmukler

40.  ரேபிஸ் எனப்படும் வெறிநாய் கடித்த நோயிற்கு ஸ்ட்ராமோனியமே மிகச்சிறந்த மருந்து. ரேபிஸ் குறிகள் வெளிப்படத் துவங்கிய பின்னரும் ஸ்ட்ராமோனியத்தின் தாய் திரவத்தில் 5 சொட்டுகள் முன்னேற்றம் ஏற்படும் வரை தொடர்ந்து கொடுக்க வேண்டும்.
-       George Royal, M.D.

41.  சிக்குன்குனியா நோயை நலப்படுத்த முடியாமல் தவிக்கும் அலோபதி மருத்துவத்தில் , அந்நோயை நூறு சதவீதத்தில் குணப்படுத்தும் ஆற்றல் பாலிப்போரஸ் பினிகோலா என்ற ஹோமியோபதி மருந்திற்கு உண்டு.
-       M. M. Das – Mumbai

42. பகலானாலும், இரவானாலும் தூங்க ஆரம்பித்தவுடனோ அல்லது கண்களை மூடிப் படுத்தவுடனோ வியர்க்கத் தொடங்கினால் அந்தத் துயரருக்கு கொடுக்க வேண்டிய மருந்து கோனியம்.
-       E. B.Nash

43.  சிறுநீர்ப்பை  அழற்சிக்கு சிறந்த மருந்து சாபல் செருலுட்டா. இம்மருந்து கொடுத்த 24 மணிநேரத்திற்குள் 90 சதவீதமான துயரர்கள் நலமடைந்து விடுவார்கள். 

-       Frank Hartman