Friday 18 May 2012

சாமுவெல் ஹானிமன்



மருத்துவ உலகத்தையே புரட்டிபோட்டு புதிய வரலாறு படைத்தவர்  மரு. சாமுவேல் ஹானிமன்.ஜெர்மனி நாட்டில் மெய்சன் நகரில் கி.பி 1755 ஆம் ஆண்டு எப்ரல் 10 இல் ஒரு ஏழை மண்பாண்ட தொழிலாளிக்கு மகனாக பிறந்தவர் . தூயஉள்ளம், கடின உழைப்பு ,நேர்மை தவறாத பண்பு போன்ற குணங்களுக்கு சொந்தக்காரர். மருத்துவம் என்ற பெயரில் மனிதனுக்கு ஏற்படும் நோய்களின் அடிப்படையான காரணங்களை தெரிந்து கொள்ளாமல் ,சூடு போடுதல் ,ரத்தத்தை வெளியேற்றுதல், தனிமைபடுத்துதல்  போன்ற மிருகத்தனமான சிகிச்சை முறைக்கு சாவு மணியடித்தவர் . ஹோமியோபதி என்ற புதிய மருத்துவ முறையை தனியொரு மனிதனாக கண்டெடுத்த மாமேதை.

 கி.பி  1790 இல் மரு. கல்லன் என்பவரின் மருத்துவ புத்தகத்தை மொழிபெயர்க்கும் பொழுது சின்கோனா மருந்தின் மூலம் ஹானிமனுக்கு ஏற்பட்ட தெளிவு அதாவது எப்பொருள் ஒரு நோய் தன்மையை உருவாக்குகிறதோ அப்பொருள் அதே நோய் குறிகளை சரிசெய்யும் அல்லது குணபடுத்தும் . இதுவே ஒத்ததை ஒத்தது போக்கும் என்ற தத்துவம். இதை ஜெர்மனி மொழியில்”Simillia Similibus Curenturஎன்றும், ஆங்கிலத்தில்”Like cures Like” என்றும் அழைக்கபடுகிறது. அதன்பிறகு ஹோமியோபதி மருந்துகளை நிருபணம் செய்ய ஆரம்பித்தார் .

அவரது ஆய்வுகளை கி.பி 1796 இல், ” An essay on a new principle for ascertaining the curative powers of Drug”. என்ற கட்டுரையாக  வெளியிட்டார். இதுவே ஹோமியோபதியில் வெளிவந்த முதல் கட்டுரை. ஹானிமன் தமது வாழ்நாளில் 99 மருந்துகளை நிருபணம் செய்துள்ளார். இந்த மருந்துகளின் தொகுப்பே "மருந்து காண் ஏடு" (MATERIA MEDICA) என்று அழைக்கப்படுகிறது .


அதன்பிறகு தொடர்ந்து ஆய்வு செய்து ஹோமியோபதிக்கான ஒரு தத்துவத்தையும் உருவாக்கினர். அது கி.பி.1810 இல் ,” ORGANAN OF THE RATIONAL ART OF HEALING”  என்ற பெயரில் நூலாக வெளியிட்டார். சுருக்கமாக " ORGANAN" என்று அழைக்கப்படுகிறது. இந்நூல்களே ஹோமியோபதிக்கு மூலம். ஏறத்தாள 53 ஆண்டுகள் ஹோமியோபதிக்கு உழைத்த அந்த பெருந்தகை கி.பி.1843 இல்( 02/07/1843) மறைந்தார். இவர் மறைந்த பொழுது எழுதி வைத்திருந்த   வாசகம், " நான் என் வாழ்வை வீணாக கழித்துவிட வில்லை " என்பது  உண்மை .

No comments:

Post a Comment