Tuesday 18 December 2012

ஹோமியோபதி நன்முத்துக்கள்-1


மன நோயாளிகளுக்கு ஸ்ட்ராமோனியம், விராட்ரம் ஆல்பம் மற்றும் ஹ்யாசியமஸ் மருந்துகள் கொடுத்தால் , மனநோய்க் காப்பகங்களில் உள்ள 75 சதவீதமான துயரர்களை குறைந்த காலத்தில் நலப்படுத்தி வெளியே அனுப்ப முடியும்.   

-Dr.DORATHY SHEPHERD
-More Magic of the Minimum Dose.
-Page-227


நாள்பட்ட ஆஸ்த்மா நோயில் ஹீபார் சல்பர் மற்றும் நேட்ரம் சல்பர் மருந்துகள் அநேகமாக ஒத்திருக்கும். ஹீபார் சல்பரில் ஆஸ்த்மா வறண்ட குளிர் காற்றால் அதிகரித்து , ஈரம் ததும்பிய நிலையில் நோய்த்தன்மை குறையும். ஆனால் , நேட்ரம் சல்பர் இதற்கு எதிரிடையானது (DULC). ஈரமான பருவ நிலையில் மிகவேகமாக நோய்த்தன்மை குறைவது ஹீபார் சல்பர் மருந்தைப் போல் வேறெந்த மருந்திலும் இல்லை.

DR.E.B.NASH
Leadrers in Homeopathis Therapeutics
Page-279.

நீங்கள் ( ஹோமியோபதி மருத்துவர்கள்) மருந்து தேர்வு செய்து கொடுத்த பின்பு அத்துயரர் இறக்க நேரிட்டால் நீங்கள் என்ன செய்தீர்கள் (தவறு ஏதாவது) என்பதை சிறிதளவாவது தெரிந்து கொள்ளுங்கள் . அறியாமல் செயல்பட்டு மற்றொரு துயரர் இறப்பதற்கு காரணமாக  இருப்பதைவிட , ஒரு துயரர் இறக்கநேரிடும் பொழுது நாம் என்ன செய்திருந்தோம் என்பதை தெரிந்திருப்பது நல்லது.

DR.J.T.KENT
LECTURES ON HOEOPATHIC MATERIA MEDICA
Page-578.

No comments:

Post a Comment