Wednesday 7 September 2022

தடுப்பூசிகள்

 

தடுப்பூசிகள்

 

பெற்றோர்கள் , தங்களது குழந்தைகளை பாதிக்கும் வாய்ப்புள்ள  நோய்களிலிருந்து , அவர்களை பாதுகாக்க வேண்டுமென்றால், குழந்தை பிறந்த சில மாதங்களில் அவர்களுக்கு போடப்படும் அதிகப்படியான தடுப்பூசிகளை கட்டாயமாகத்  தவிர்க்க வேண்டும். 

 தடுப்பூசி என்பது, இறப்பைத் தரும் நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும் ஒரு வகையான காப்புறுதி போல் அடிக்கடி தெரிகிறது. ஆனால், நம்மிடம் இருக்கும் பணத்தை எல்லாம் காப்புறுதிக்காக செலவு செய்தால், உணவிற்கு செலவிடுவதற்குக் கூட நம்மிடம் பணம் இருக்காது, அதனால் நாம் இறக்க நேரிடும். இது ஒரு பாலியல் ரீதியாக பரவும் நோயைப் போன்றும் மற்றும் தவிர்க்க முடியாத கொடிய நோயிற்குள் வாழ்க்கை இருப்பதை விவரிப்பது போன்றது!

 தற்போதைய நாட்களில் , மக்களை அளவிற்கு அதிகமான தடுப்பூசிகள் போடுவதற்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. சில நாடுகளில் , பிறந்த நான்கு மாதக் குழந்தைக்குக்கூட, 19 தொற்று நோய்க்கான தடுப்பூசிகளைச் செலுத்துகிறார்கள், இது வழக்கத்திற்கு மாறானதாக இல்லையா?- அதாவது , மூன்று தவணைகளில் கல்லீரல் அழற்சி தடுப்பூசி ( Hepatitis B) , ஒரு காசநோய் எதிர்ப்புத் தடுப்பூசி (BCG)  , கூடவே மூன்று தடவை தொண்டை அடைப்பான், நரம்பு இசிவு நோய் மற்றும் கக்குவான் இருமலைத் தடுக்கும் தடுப்பூசி (DPT)  , இரத்தம் உறையாத நோய் நிலைக்கு (Hemophillia)  மற்றும்  தொடர்ச்சியான கக்குவான் இருமல் ( Whooping cough) ஆகிவற்றை இணைப்பதாக இந்த தடுப்பூசிகள் இருக்கின்றன.

இத்தகைய அத்துமீறல்களை நிறுத்துவது அவசியமாக இருக்கிறது, ஏனென்றால் இந்த தடுப்பூசிகள் உடலினுள்ளே இருக்கும் நோய்த்தடுப்பாற்றலில்  பாதிப்பை உருவாக்கி அதன் மூலம் ஈளை நோயை ( ASTHMA) உற்பத்தி செய்கிறது. மூச்சுத்திணறல் மற்றும் நெரிசலான நுரையீரலுடன் கூடிய ஈளை நோய், சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் சிகரெட் புகையின் வெளிப்பாடு ஆகியவற்றால் அதிகமாகிறது என்று குற்றம் சாட்டப்படுகிறது, ஆனால் , பொதுவாக இந்த நிலை முதலில் செலுத்தப்பட்ட  தடுப்பூசிகளால் தூண்டப்படுகிறது.

 சில மனிதர்கள் , பகுத்தறிவிற்கு ஒவ்வாதது என்று எல்லா தடுப்பூசிகளையும் மறுக்கிறார்கள். இவ்வாறு தடுப்பூசிகளிலிருந்து விலகியிருக்கும் சிலர், இயற்கையாக கிடைக்கும் உணவுகள் மற்றும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். அதாவது, இவர்கள் கல்கேரியா சிலிக்காட்டா (CALC-SIL) மருந்திற்குரியவராக இருக்கிறார்கள். இவர்கள்,  மிக நீண்ட நாட்களுக்கு முன்பு இறந்த போன, தங்களுக்கு நெருக்கமாக இருந்த மனிதர்களை நினைவில் வைத்துக் கொண்டு வாழ்கிறார்கள் - அதாவது அவர்களிடம் மனரீதியாக தங்களது  பிரச்சனைகளை சொல்லி  அவர்களின் ஆலோசனைகளை கேட்கிறார்கள் . மற்றும் சிலர் , தடுப்பூசிகள் போட்டபிறகு ஆபத்தான நோய்களுக்கு உள்ளான தங்களது குடும்ப உறுப்பினர்களைப் பார்த்த பிறகு,  அதிலிருந்து விலகி இருக்க விரும்புகிறார்கள். இந்த சூழ்நிலையில் நமக்கு தூஜா (THUJ) , சிலிகா ( SIL) அல்லது சல்பர் (SULPH) போன்ற மருந்துகள்  நினைவிற்கு வரும்.

 

சில மனிதர்கள் மேற்கூறிய  நிலைக்கு எதிராக இருப்பார்கள் மற்றும் புழக்கத்தில் இருக்கும் எல்லா தடுப்பூசிகளையும் போட்டுக்கொள்ள விரும்புவார்கள். உதாரணமாக , ஆர்சனிக்கம் ஆல்பம் ( ARS) மனிதர்கள், தன்னை சாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள என்ன விலை கொடுத்தாவது மருத்துவம் செய்து கொள்வார்கள்.

ஆனால், குழந்தை பிறந்தவுடனே தடுப்பூசிகள் போடுவது பயனற்றது ஆகும் . ஏனென்றால், குழந்தை பிறந்து  ஒன்பது மாதங்கள் வரை , அக்குழந்தை பிறப்பதற்கு முன்பு   தாயின் நஞ்சுக்கொடி அல்லது கருக்குடையிலிருந்து பெறப்பட்ட நோயெதிர்ப்புப்பொருள் அவர்களை நோய்த் தாக்குதலிலிருந்து  பாதுகாக்கிறது (தாய்ப்பாலில் உள்ள நோயெதிர்ப்புப்பொருள்  செரிமான மண்டலத்தை இரைப்பை குடல் அழற்சிக்கு எதிராக பாதுகாக்கும் போது) .

தொடர்ச்சியான கக்குவான் இருமலுக்குப் போடப்படும் தடுப்பூசி பல ஆபத்துகளை சுமந்து செல்கிறது [மூளை அழற்சி போன்ற நோய் ( ENCEPHALITIS)] மற்றும் ஈளை நோய் உருவாவதற்கு காரணமாக இருக்கிறது. எனவே ஏற்கனவே சமூகமயமாக்கபட்டிருக்கும்  குழந்தைகளுக்காக இந்தத் தடுப்பூசி ஒதுக்கப்பட வேண்டும். அதனால் , குழந்தையின் ஒரு வயது வரை ,அவர்களை நோயிலிருந்து பாதுகாக்க இரண்டு தடுப்பூசிகள் மட்டுமே போதுமானதாக இருக்கும்- அதாவது , தொடர்ச்சியான கக்குவான் இருமல் ஏற்பட்டு ஆபத்தான நிலை உருவாகும் போது மட்டும் இந்த தடுப்பூசியை போடவேண்டும்.  இருந்தாலும் , குழந்தையின் குடும்ப வரலாற்றில் வலிப்புநோய்கள் அல்லது ஈளை நோய் போன்ற நோயச்சார்பு  அல்லது குழந்தைப் பிறப்பில் சிக்கல்கள் இருந்திருந்தாலும் , இந்த தொடர்ச்சியான கக்குவான் இருமலுக்குப் போடப்படும் தடுப்பூசியை முழுவதுமாக தவிர்க்க வேண்டும்.  ஆனாலும், தடுப்பூசி போட்டபிறகு தொடர்ந்து இருமல் இருந்தால், நாம் கொடுக்க வேண்டிய முதல் மருந்து கார்போ வெஜிடபிலிஸ் 30 C  (CARB-V) ஆகும், இது இருமலை சீர்படுத்தி உடலுக்கு சமநிலையைக் கொடுக்கிறது.

காசநோய் எதிர்ப்புத் தடுப்பூசி (BCG)  பற்றி ஆராயும் போது, இதன் செயல்படும் திறன் இன்னும் நிரூபிக்கப்படாவிட்டாலும், இது ஈளை நோய் மற்றும் ஒவ்வாமை ஆகியவற்றை தூண்டுகிறது என்று நன்றாக அறியப்படுகிறது . காசநோய் எதிர்ப்புத் தடுப்பூசி (BCG)  போட்டுக் கொண்டபிறகு, சிலிகா ( SIL) நோயாளிக்கு ஒரு காயம் ஏற்பட்டால் அது சீழ்ப்பிடித்தலை  உருவாக்குகிறது மற்றும் நலமடைய மறுக்கிறது. சீழ் உருவான பிறகு அதில் உயிரோடு இருக்கும்  காசநோயின் நுண்ணுயிரிகள் , அவருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் ஒவ்வொருவருக்கும் தொற்று உண்டுபண்ணக்கூடிய ஆபத்து இருக்கிறது- குறிப்பாக, நோயெதிர்ப்பாற்றல் குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கும் எய்ட்ஸ் நோயாளிகள் மற்றும் தொற்றுநோயைத்  தணிக்கும் மருந்துகளை எடுத்து வருபவர்களுக்கும் அல்லது சிறுநீரக வெளியேற்றம் /சிறுநீர்ப்பை சுரப்பு ஆகியவற்றிக்காக மருத்துவச் சிகிச்சையில் இருப்பவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.  அத்தகைய நோயாளிகளுக்கு வெளிப்பகுதியில் காசநோய் எதிர்ப்பு மருந்து மற்றும் நுண்ணுயிரியின் வளர்ச்சியைத் தடுக்கும் களிம்புகள் ஆகியவற்றை  உபயோகிக்க வேண்டும், அத்துடன் உடலின் உள்ளுக்குள் சிலிகா (SIL 15-30C) மற்றும்  டியூபர்குலினம் ( TUB 15-30C) மருந்துகளை சில தடவைகள் கொடுக்க வேண்டும். 

 

இறுதியாக , குழந்தைகளுக்கு தட்டம்மை (MEASLES) , மணல்வாரி  [ RUBELLA (ஜெர்மனி நாட்டின்)] மற்றும் பொண்ணுக்கு வீங்கி  அல்லது தாளம்மை (MUMPS) போன்ற நோய்களுக்கு எதிராக தடுப்பூசி போட வேண்டுமா? என்ற கேள்வி எழுகிறது. முதலில், ஒன்றுக்குகொன்று சம்பந்தமில்லாத  இந்த மூன்று நோய்க் கிருமிகளையும் ஒன்றாக இணைத்து,  ஒரே தனித்த தடுப்பூசியாக போடுவது முற்றிலும் இயற்கைக்கு முரணாக இருக்கிறது. இரண்டாவதாக, நோய் வரும் வரை  இந்த தடுப்பூசியால் பாதுகாக்க முடியாது. மற்றும் மூன்றாவதாக, இந்த தடுப்பூசி வலுவற்றதாக இருப்பதால் மிக எளிதாக அழிக்கப்பட்டுவிடும் உதாரணமாக அதிகப்படியான வெப்பத்திற்கு இலக்காகும் போது இந்த தடுப்பூசி வலுவிழந்துவிடும். வேறு வார்த்தையில் கூறுவதென்றால் , தடுப்பூசி போடுவதன் மூலம் பெருவாரியாக பரவுகின்ற தொற்று நோய்களான தட்டம்மை (MEASLES) , மணல்வாரி   மற்றும் பொண்ணுக்கு வீங்கி  அல்லது தாளம்மை  போன்ற நோய்களை வளர்ந்த மக்களிடம் உருவாக்கும்  ஆபத்தை செய்கிறோம்,  அதாவது, இத்தகைய நோய்களை சகித்துக் கொள்ளும் திறன் குறைந்தவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். மேலும், குழந்தை பருவ நோய்களை  தடுப்பூசிகளால் முற்றிலும் அழிக்கப்படுவது பெரும்பாலும் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கிறது மற்றும் மாற்றுகிறது. இது முழு சமூகத்தையும் பாதிக்கும் ஒரு பிரச்சனையாகும், எனவே இன்று இருக்கும் நிலையை கவனத்தில் கொண்டு, இது பற்றி மிகவும் விரிவாக விவாதிக்கப்பட வேண்டும்.

 என் கருத்துப்படி, மற்ற அனைத்து தடுப்பூசிகளும் தேவைக்கு அதிகமானவை , உதாரணமாக,   மூளைக்காய்ச்சல். இது,  உலகின் பல பகுதிகளில் அரிதாக இருப்பது மற்றும் பொதுவாக  இதற்கான தடுப்பூசி பெரிய குழுக்களில் வாழும்  குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கல்லீரல் அழற்சி தடுப்பூசியைப் பொறுத்தவரை, பிரான்சில் கடந்த இருபது ஆண்டுகளாக குழந்தைகள் மருத்துவராக பணி  செய்து வந்தாலும் ,  கல்லீரல் அழற்சியினால் பாதிக்கப்பட்ட,  பதினான்கு வயதிற்கு கீழுள்ள ஒரு குழந்தையைக் கூட நான் காணவில்லை. மேலும் கூறுவது என்னவென்றால், இந்த மரபணு ரீதியாக தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் நம்பகத்தன்மை வாய்ந்த பாதுகாப்பிற்கான  உத்தரவாதத்தை இன்னும் கொண்டிருக்கவில்லை மற்றும் தண்டுவட மரப்புநோய்  , பார்வை பிரச்சினைகள், பல்வேறு தன்னியக்க நோயெதிர்ப்பு நோய்கள் அல்லது தன்னுடல் தாக்கு நோய் மற்றும் நீரிழிவு போன்ற பல பக்க விளைவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

 

மூலம் : Homeopathic Remedies for the Stages of Life, மரு.  தீதியர் கிராண்ட் ஜார்ஜ் MD

தமிழில்:  சு. கருப்பையா , மதுரை.

 

 

 

No comments:

Post a Comment